ஸர்மிளாஸெய்யித்துடன் நாமும் கைகோர்த்துக் கொள்கின்றோம்

ஊடறு ஆர் குழு

பிபிசியில் நேர்காணல் ஒன்றை கொடுத்ததிலிருந்து இன்று வரை பல நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்,கவிஞர் ஸர்மிளா ஸெய்யித்தின் எழுத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் கருத்தியல் ரீதியாக முகம்கொடுக்க முடியாத காழ்ப்புணர்வு கொண்ட விசமர்களால் அண்மையில் ஸர்மிளா ஸெய்யித் கொடூரமாக கொலைசெய்யப்பட்டுவிட்டதாக அவரது புகைப்படத்தை போட்டு பொய்யான செய்தியை பரப்பியுள்ளனர். இதுபோன்ற அனாமதேய அச்சுறுத்தல்கள் மூலம் அவரையும் அவரது எழுத்துக்களையும் இல்லமல் செய்து அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் கொலைவெறித் தாண்டவம் புரியும் விசமிகளை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் . மேலும் இந்த வன்முறைக்கு எதிராக ஸர்மிளாஸெய்யித்துடன் நாமும் கைகோர்த்துக் கொள்கின்றோம். .இதற்கு எதிராக அவர் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க நாம் துணை நிற்போம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *