எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர். குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதுகுறித்து “ஸைனா அஸாம்” என்பவர் எழுதிய இந்தக் கவிதை இதயத்துள் இறங்கி ஏதோ செய்தது. …

Read More

கடலில் ஓர் இரத்த சரித்திரம் புதைக்கப்பட்டுள்ளது என்பதை நான் கூட அறிந்திக்க மாட்டேன் – அய்லி

குறு மணல் அதிர்ந்து கொண்டிருந்தது ஊதை கல்லாக்கப்பட்டிருந்தது பாதை முழுக்க உப்பு காய்ந்துஇசெறிந்து ஊசலாடிக்கொண்டு இருந்தது. பல தொலைவில் நெடு நாள் அடைக்கப்பட்டிருந்த முருங்கை கற்கள் இன்று ஆயுதமாக அவர்களை சூழ பாதுகாத்திருந்தது அவர்கள் குரல் தொலைக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட உறவுகளை …

Read More

பேரன்பே பெண்களாய்! -சுதாகினி டெஸ்மன் றாகல்-இலங்கை

அன்பின் மறு உருவம் என்றாலே பெண் தானே?….. இது அனுபவம் தந்த பாடம். பத்துத் திங்கள் தவமாய் தவம் கிடந்து பத்தியம் பல காத்து பெற்றெடுத்த தன் மகவை, பாலூட்டி சீராட்டி சிறு துரும்பும் அண்டாமல் கண்ணின் கருமணியாய் காத்திடும்- அன்னையவள் …

Read More

இப்படியா(க்)கப்பட்ட என் இரவுகள் சந்திரலேகா கிங்ஸ்லி

இப்படியாக்கப்பட்ட என் இரவுகளுக்காய்நான் எப்பொழுதும் பயப்பட்டதாயில்லை அந்தப் பெரும் கொடும் இரவுகளில் இருள் சூழ்ந்து இருப்பதாய் தான் சொன்னார்கள் ஆனாலும் அந்த இருண்ட கடும் நிறத்துக்காய் நான் ஒருபோதும் பயப்பட்ட தாகவேயில்லை நான் இருட்டில் பயப்படுவேன் என்பதற்காக தாயத்துகளையும் மந்திர கயிறுகளையும் …

Read More

மழைமொழி – புதியமாதவி(மும்பை)

தூறல் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி நின்றுவிட்டது. மெல்லிய வெளிச்சத்தையும் பிடுங்கித் தின்ற இரவு தன் பசி அடங்காமல் படுத்திருந்தது. மழைநேரத்தில் மின்சாரத்தடைக்குப் பழகிய கால்கள் மெல்ல அறையை விட்டு வெளியில் வருகின்றன. வேர்களின் தாகத்தைத் தணிக்கும் இலைகளின் ஈரம் சொட்டுசொட்டாக வடியும் இரவு …

Read More

பிரியாந்தியின் கவிதை( 69 இலட்சம் மக்களின் மன்னாதி மன்னர்)

அவர்களின் அரசன் அல்லது நவீன துட்டகைமுனு அவர்கள் தமது யுகபுருஷரை நந்திக்கடல் தீரத்திலிருந்து மீட்டுவந்தனர் எல்லாளனின் தலையை நடுவாகப் பிளந்து வழிந்த குருதியை பூசி மன்னன் தன் குடுமியை முடிந்து கொண்டதாக உடனிருந்த ‘நந்தமித்ர’ கூறினார் அவர்களின் வரலாற்றில்… ஒப்பற்ற வீரர்கள் …

Read More

தலைப்பிலி கவிதை -நிருபமா

-நிருபமா- அந்த முள்ளு வேலிக்கு வெளியே சுண்டங்கத்தரி விதைகளைத் திருடிக் கொண்டிருக்கிறான்! சிறுகுடலும் பெருங்குடலும் சத்தமிட்டுக் கலவரப்படுகிறது பசித்திருப்பதை விடுத்து அவனால் என்ன செய்துவிடமுடியும்? முள்ளு வேலிக்கு வெளியே அண்ணாந்து பார்க்குமளவிற்கு அந்தப்பக்கம் இருமாடி வீடு! தோட்டத்து மரங்கள் கனிந்து தரையெங்கும் …

Read More