பெண்ணிய செயற்பாட்டளாரான தயாபரி தயாபரனுக்கு எமது அஞ்சலி

மட்டக்களப்பு உழைக்கும் மகளீர் அமைப்பின் பணிப்பாளரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான தயாபரி தயாபரன் இன்று (19.02.2010) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமானார்.1980களின் நடுப்பகுதியில் இருந்தே பல்வேறு சமூக முன்னேற்றம் கருதிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த தயா 1990களில்  மட்டக்களப்பில் இயங்கிய மன்று என்ற அரச சார்பற்ற நிறுவனத்தில் முக்கிய செயற்பாட்டாளராக விளங்கியவர். பின்னர் உழைக்கும் மகளீர் அமைப்பை உருவாக்கி   இறக்கும் வரை மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் பெண்களின் வாழ்நிலையை உயர்த்துகின்ற பல சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டிருந்தார். அத்துடன் எழுத்து துறையிலும் ஈடுபட்டு இருந்ததுடன் பெண்கள் தொடர்பான பல சமூக ஆய்வுகளையும் மேற்கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *