வன்முறைகளும் கண்டனங்களும் தொடர்கின்றன ஆனால் தீர்வுதான் ???

அரேபிய நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் பெண்கள் மிக துன்புறுத்தப்படுவதாகவும் அதுவும் கூடுதலாக இலங்கை பெண்கள் மிகவும் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் அமைப்பு பலத்த கண்டனம் தெரிவத்துள்ளது கடந்த ஆகஸ்ட் மாதம் ஆரியவதி என்ற பெண்ணின் உடலில் ஆணிகளை ஏற்றிய சம்பவத்திற்கு மீண்டும் கடந்தவாரம் ஜோர்டானிலிருந்து இலங்கை;கு திருப்பி அனுப்பட்ட பெண்ணின் உடலிலில் இருந்து மீண்டும் பல ஆணிகளை டாக்டர்கள் எடுத்துள்ளார்கள் இப்படியான வன்முறைகளை அரேபிய நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இது தங்களுக்கு மிகவும் அதிர்ச்சியைத் தருவதாகவும் மனித உரிமைகள் அமைப்பு பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளன.

ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் தமது கஸ்டங்கள் நிமித்தம் மத்தியகிழக்கு போவது தொடர்கிறது. அவர்கள் மீதா வன்முறைகள், தயரங்கள் தொடர்கிறது, அதற்கெதிரான அறிக்கைகளும், கண்டனங்களும் தொடர்கிறது… ஆனால் தீர்வு மட்டும்…???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *