அவர்களின் பண்பாட்டையும், சமுதாயத்தில் சரியாகக் காலூன்றாத அவர்களின் அவல நிலையையும் இவ்வாறு எழுத முடியுமா? முயன்றிருக்கிறார் சமுத்திரம்; வெற்றியும் பெற்றிருக்கிறார். திருநங்கைகள் வசிக்கும் இடங்கள், சூழ்நிலைகள், விழாச்சடங்குகள் ஆகியவை நன்கு உணர்த்தப்பட்டுள்ளன.
திருநங்கைகளைப்பற்றிய சமுதாயப் பொறுப்புணர்ச்சியும், மனிதநேயமும் மிகுந்த அக்கறையோடு இந்நாவலில் கூறப்பட்டுள்ளன. எடுத்துக்கொண்ட கருவை மேலோட்டமாக விரிவு படுத்தி எழுதாமல் அதன் உள்ளே புகுந்து புறப்பட்டு வந்திருக்கிறார். இதற்காக நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். நிறைய பேரை சந்தித்திருக்கிறார். நாவலாசிரியரின் அந்த உண்மையான உழைப்பு நல்ல பலன் அளித்திருக்கிறது என்பதற்கு நாவல் பெற்ற வெற்றியே சாட்சி.
