//ஆம் இவ்வுண்மையை உரக்கச் சொல்ல நவம்பர் 2,3 தேதியில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்தேறிய #ஊடறு2019

Those who do not move
do not notice their chains
Rosa Luxembourg

“பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” மாநாட்டிற்கு முதன்முதலில் சிங்கப்பூரில் நடைப்பெற்ற சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு பேச்சாளர்கள் பங்கேற்று உரையாற்றியது ஒரு வரலாற்று //

வரலாற்றின் முதல் வர்க்க ஒடுக்குமுறை என்பது பெண்பாலை ஆண்பால் ஒடுக்குகின்ற ஒடுக்குமுறையுடன் பொருந்துகிறது என்றார் பிரெட்ரிக் ஏங்கல்ஸ்.

ஆம் இவ்வுண்மையை உரக்கச் சொல்ல நவம்பர் 2,3 தேதியில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நடந்தேறிய #ஊடறு2019 “பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” மாநாட்டிற்கு முதன்முதலில் சிங்கப்பூரில் நடைப்பெற்ற சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டு பேச்சாளர்கள் பங்கேற்று உரையாற்றியது ஒரு வரலாற்று மிக்க நிகழ்வாகும்.

பெண்ணியம், பெண் அடையாளம், பெண்மொழி,பெண்ணெழுத்து,பெண்ணரசியல்,பெண்ணிலை அறிவு என்பவை பற்றிய நெடிய உரையாடல்கள் இம்மாநாட்டின் மூலம் உலகில் வாழ் எல்லா தமிழர்கள் கவனத்தை ஈர்த்திருக்கும் என்பது
சிறிதளவும் சந்தேகமில்லை.

உடலுறுதி கொண்ட ஆண்களைவிட மனவுறுதி கொண்ட பெண்கள் சிறப்புமிக்கவர்கள் என்பதை இம்மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பெண்களும் நிரூபித்து விட்டார்கள்.
மிக்க மகிழ்ச்சி.

பகிர்ந்த முழு மூன்று காணொளியை பார்க்கவும்.
தொடரட்டும் உங்கள் களப்பணி.
வாழ்த்துகள்.
#TAMILSG2020

நன்றி Govinda Rajan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *