:: பேய்களும் பூசாரிகளும் ::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா)

பேய்களுடன் ஆன
எனது தொடர்பு

பூசாரிகளுக்குப் பிடிப்பதில்லை.

எனக்குப் பேய்கள் …

முருங்கை மரத்தில் தொங்க
கற்றுக்கொடுத்தன

நடு நிசி இரவில்
இஷ்டம் போல் சுற்றித்திரிய
கற்றுக்கொடுத்தன

அயல் உடலில்
அன்னியம் இல்லாது
ஊடுருவ கற்றுக்கொடுத்தன

விரட்டு விரட்டு என
எனக்கு வேண்டாதவரை
விரட்ட கற்றுக்கொடுத்தன

எனக்கே எனக்காக
பேய்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த
வித்தைகளை

பூசாரிகளுக்குப்
பிடிப்பதில்லை.

எனக்கும் பேய்களுக்குமான
தொடர்பு
மிக மிக வேகமாக
வளர

நானும் பேயாகி இருந்த நேரம் …

பூசாரிகள்
மாறிப்போய் இருந்தனர்.

அவர்கள்
முருங்கை மரம் ஏர
பழகிக்கொண்டிருந்தனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *