கவிதை 1அவள் 1,கவிதை 2 அவள் 2,கவிதை 3 அவள் 3

-யோகி ( ஜனவரி 2016)

கவிதை 1அவள் 1

மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது
முன்பொருமுறை 
அவளோடு விளையாடி
சினேகம் வளர்த்து
பின் பிரிந்து
வானம் சென்ற 
அதே மழை..
இப்போது
முட்டி மோதி
ஆயிரமாயிரம் துளிகள் என
அவள் மீது விழுகிறது
ஒவ்வொரு துளியும்
மீதமிருக்கும் 
அவளின் மிச்ச வாழ்கையை
பேசுகிறது
ஒவ்வொரு
துளியிலும்
பல்லாயிரம் தடவை
அடைமழை பொழிந்துகொண்டிருக்கிறது…

………………………………………………………………………
கவிதை 2 அவள் 2
நான் இறுதியாக சந்தித்த
அந்த இரவு
மிக அர்ப்புதமானது
 
அவள்!
ஆம் அவளேதான்
தேவனுக்கு நிகரான
அழகி அவள்
அவளின் கனவுக்குள்
என்னை அழைத்திருந்தாள்
போயிருந்தேன் 
 
அவளின் கனவால் ஆன
அந்த உலகத்தில்
ஆதியும் அந்தமுமாக அவளே இருந்தாள்
அவளின் மது கோப்பையில்
நிலா செத்துக்கிடந்தது
 
எங்கோ ஒர் ஆணியில்
சூரியனை கட்டி தொங்க விட்டிருந்தாள்
சில ஆண்களையும்
கொன்று
அவளின் கனவுக்கு
வர்ணம் வார்த்தும் வைத்திருந்தாள்
 
அவளின் கனவில்
கறுப்பு வெள்ளையாக
நுழைந்த என்னை
வர்ணங்களால் ஆளிங்கனம்
செய்தாள்
 
அடிக்குரலெடுத்து
கத்திய
எனது மௌனம்
அவளின்
பசியை தின்று தீர்த்துக்கொண்டிருந்தது
 
அந்த அர்ப்புத இரவிலிருந்து
வெளிவந்த நான்
என் முகத்தில்
பழுத்திருந்த பருவை
கிள்ளிவீசிக்கொண்டிருந்தேன்
 
-யோகி ( ஜனவரி 2016)
 
………………………………………………….
கவிதை 3அவள் 3

திரைச்சீலை அணியாத

ஜன்னலின் வழியே வந்தது
அந்தச் சாம்பல் பறவை
அதன் காலில் சிக்கிவந்த
ஒற்றை நட்சத்திரம்
யட்சியின் 
தனிமை நதியில் விழுந்து
யாதவ ஒளியை எரிந்துகொண்டிருக்கிறது
அவளின் தவம்
இரவோடு அல்ல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *