காட்டுமிராண்டி செயல்

நன்றி .http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74397/language/ta-IN/article.aspx

3ஆம் இணைப்பு:- ஈபிடிபியின் கோட்டைக்குள் கிளம்பிய எதிர்ப்பு!

 சிறுமி லக்சினி பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்ட பின்னர் தலையை குத்தி சிதைத்து கொல்லப்பட்டார் என்று வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டள்ளது. சிறுமி லக்சினி படுகொலைச் சந்தேக நபர் நெடுந்தீவில் இடம்பெற்ற பல்வேறு பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் யாழப்;பாணத்தில் இடம்பெற்ற பல படுகொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 
 நெடுந்தீவில் பள்ளி மாணவி 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்து கொடூரமாகக் கொலை நடந்த சம்பவத்தில் குற்றவாளியாக ஈபிடிபி உறுப்பினர் கிருபா என்பவர் சிறிலங்கா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இடம் பெற்றுள்ள நிலையில் நெடுந்தீவில் பதற்றம் நீடிக்கிறது.  இவர் ஏற்கனவே இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கிலும் ஊடகவியலாளர் நிமலராஜனைப் படுகொலை செய்த வழக்கிலும் சந்தேக நபராவார். இவர்மீது குற்றப் பத்திரகையை தாக்கல்செய்ய காவல்துறையினர் தயங்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *