தூக்குத் தண்டனை எதிர்பார்த்திருக்கும் பெண் “அஷ்டானி”

ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணத்தைச் சேர்ந்த சகினா மொஹிமதி அஷ்டானி என்ற பெண்ணை கல்லால் எறிந்து கொல்லுமாறு ஈரான் நீதிமன்றம் விதித்து இருந்த தண்டனையை தற்போது மாற்றி  மரணதண்டனை வழங்குமாறு தீர்ப்பு அளித்துள்ளது. 

இப் பெண் வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொண்டார் என்பதற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது கல்லால் எறிந்து கொல்லும் தண்டனையை பல சர்வதேச மனித அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து    தற்போது ஈரான்  அரசு இப் பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்குவது குறித்து ஆலோசித்துவருகிறது குறித்த பெண் மீதான மரண தண்டனை நேற்றைய தினத்தில் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டிருந்தாலும் தண்டனை வழங்கும் முறை குறித்து ஏற்பட்ட சிக்கலில் அது பிற்போடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இப் பெண்ணுக்கு பிரேசில் அரசு மேற்படி பெண்ணுக்கு அடைக்கலம் வழங்கவும் முன்வந்தது. அதேபோன்று கல்லால் எறிந்து கொலை செய்வது காட்டுமிராண்டித்தனமானது என பிரிட்டனும் கண்டனம் செய்துள்ளது.  இந்நிலையில் அஷ்டானி மீதான மரண தண்டனை  நிறைவேற்ற காத்துள்ளனர் நிறைவேற்றாளர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *