மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” என்ற கவிதை தொகுப்பு குறித்தக் கருத்தாடல்கள்

புதியமாதவி

ஞாயிறு மாலை(04.12.2011) 6.30 மணியளவில் மும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில்

பெயரிடாத நட்சத்திரங்கள் – அறிமுகம்
(போரிலக்கிய வரலாற்றில் ஈழப் பெண் போராளிகள்)

தமிழ் சிந்தனையாளர் சங்கமத்தின் இரண்டாம் ஆண்டு முதல் அமர்வுமும்பை, சயான் , தமிழ்ச் சங்கத்தில் ஞாயிறு மாலை(04ஃ12ஃ2011) 6.30 மணியளவில்
நடைபெறும். 13வது அமர்வின் சிறப்பு நிகழ்ச்சியாக உலக மொழிகளின் போரிலக்கிய வரலாற்றில் தமிழ்
இலக்கியம் தன் சுவடுகளைப் பதித்திருப்பதின்
அடையாளமாய் அண்மையில் ஊடறு+ விடியல் வெளியீடாக வந்திருக்கும் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற கவிதை தொகுப்பு குறித்தக் கருத்தாடல்கள்
நடைபெறும்.

தமிழர்கள் வாழும் உலக நாடுகள் எங்கும் இக்கவிதைகள் மிகுந்தக் கவனத்தைப் பெற்றிருக்கும் சூழலில் பெண் போராளிகளின்
இக்கவிதைகள் குறித்தும் களம் குறித்தும் இன்றைய நிலமை குறித்தும் கருத்துகளை மும்பை வாழ் தமிழர்களின் பதிவுகளாக்க அழைக்கின்றோம்.

தமிழ் இன உணர்வாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள்,
பத்திரிகையாளர்கள் , சமூக அக்கறைக்கொண்ட அனைவரும் கலந்துக் கொண்டு உங்கள் கருத்துகளைப்
பதிவு செய்யுங்கள்.

தோழமையுடன்

புதியமாதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *