இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்தவும்

Swiss-Bern 

 சுவிஸில்  அரசியல் புகலிடம் நிராகரிக்கப்படடுள்ள  இலங்கையர்களை திருப்பி அனுப்பும் சுவிஸ் அரசின் முடிவினை  மறுபரிசலனை செய்யக்கோரி நாளை 02.04.2011 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்று கூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.ஏதிலிகளான தமிழ்மக்களின் பாதுகாப்புத் தொடர்பாகவுள்ள இந்த விடயத்தில் சுவிஸ் அரசின் இவ்  நடவடிக்கையினை மீள் பரிசீலனை செய்யக்கோரும் இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு புலம் பெயர் தமிழர்கள் அனைவரையும் கலந்த கொள்ளுமாறு  பல அமைப்புக்கள் கேட்டுக் கொண்டுள்ளன. சுவிற்சர்லாந்தின் பல்வேறு பொது அமைப்புக்ளும் அரசியற் கட்சிகளும்இ தமிழர் அமைப்புக்களும் இனணந்து இந்த ஒன்று கூடலை ஒழுங்கு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Swiss-Bern1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *