எழுச்சி

 சுல்பிகா

போர்க்கால சோகத்தில்
மூழ்கிக்கிடந்தது அந்தக் கிராமம்

ஆண் என்று சொல்லிக் கொள்ள
ஒரு துரும்பு கூட மிஞ்சியிருக்கவில்லை
கருவுற்றிருக்கும் தாய் ஆதங்கத்துடன்
தன் அடிவயிற்றைத் தடவி
நெஞ்சில் எதிர்பார்ப்பினை
ஏற்றிக் கொள்வாள்
பச்சைத் தளிர்கள் எதுவுமற்றுக் கிடக்கும்
தரிசு நிலம் கண்டு
இறுமாப்பில் நிமிர்கின்றது
இக்கோடையின் வரண்ட வெயில்

தனக்குள்ளே சிரித்துக் கொள்ளும்
மேகத்தினுள்
புகுந்த நீர்த்துளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *