உமது நிர்வாணம் அவமானமல்ல…

–    அனுராதா-


ஆயிரமாயிரம் ஆண்டு ஆணாதிக்க பெரு நோயால்…
…அழுகிப்போன ஆண்குறி…
புளுத்துப் போன மூளை
வீரப் பிணங்களைப் புணரும் பேடிப் பிணங்கள்
வீரச்சாவடைந்த பெண்புலியின்
முலையறுத்து தேகம் சிதைத்து
அம்மண உடல்மீதமர்ந்து எக்காளமிடுகின்றன…

அந்த அழுகிப்போன ஆண்குறியை
ஆட்டி அச்சுறுத்துகின்றன
பேரினவாத மிருகங்கள்
இயலாமையின் குறியீடாய்
இறந்தவளைப் புணருது
இனவெறியின் அந்த அழுகிப்போன ஆண்குறி
“படி தாண்டிப” பயிற்சிப் பெற்று
வளையல் துறந்து சீருடை தரித்து
இனவிடுதலைத் துவக்கேந்தினாள்
ஈழவளின் தோட்டாக்கள் வீழ்த்திய
சிங்கள கூலிப்படையினர் ஆயிரமாயிரம்
வென்ற சமர்கள் பல்லாயிரம்
…வரலாற்று பாதையெங்கும் நிற்குமிந்த
ஆணாதிக்க பேயாட்டம்
இது வர்க்க சமூகத்தின் சாபம்
சமத்துவ குலங்கள் அரசனும் குடிமகளுமாய் பிரிந்த
குலத்தின் “மூத்தாளாய”, உயர்ந்து நின்றவள்.
தனிச்சொத்தின் வாரிசுக்காக “இல்லாளாய்” வீழ்ந்த
அந்த நாகரீக காலந்தொட்டு தொடரும் சரித்திரக் கொடுமை
…இன்று…
ஈழத்திலும் ஈராக்கிலும் பாலஸ்தீனத்திலும் ஆப்கானிலும்
காஷ்மீரிலும் சத்தீஸ்கரிலும் ஜார்கண்டிலும் ஆந்திரத்திலும்
அஸ்லாமிலும் குஜராத்திலும் ஒரிசாவிலும் வீரப்பன் காட்டிலும்
அன்றாடம் தொடர்கிறது அதே வெறியாட்டம்
வீரத்தை உடையாய் அணிந்த
தியாகத்தால் போர்த்தப்பட்ட
அருமைச் சகோதரிகளே…வீரப்போராளிகளே…
உமது நிர்வாணம் அவமானமல்ல…
அது இன ஒடுக்குமுறையை ஆணாதிக்கத்தை
பழி வாங்கத் தூண்டும் அணையாய் பெரு நெருப்பு
…இந்த அழுகிய ஆணாதிக்க ஆண் குறிகளை வெட்டி எறிய
சிதைந்து போன மானுடத்தை மீட்டெடுக்க
அனைத்து அடிமைகளின் விடுதலைக் கனவுகளோடு
சமத்துவ லட்சியத்தோடு
படிதாண்டுவோம்… களம் புகுவோம்…
பெண்ணினத்தின் பரம்பரைக் கனவை நனவாக்க…

–    புரட்சிகர பெண்கள் விடுதலைமையத்தின் வெளியீட்டிலிருந்து ஊடறுவுக்காக யசோதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *