முழு நீள திரைப்படம் ஒன்றில் நடிக்கவிருக்கும் திருநங்கை “அஞ்சலி”

திருநங்கைகள் சமூகத்தில் இன்னமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வந்தாலும், மாலிவுட் அதாவது மலையாள திரையுலகம் இதில் ஒரு புரட்சியை செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி தனது அடுத்த படத்தில் திருநங்கை அஞ்சலி அமீர் என்பவரை அறிமுகப்படுத்த உள்ளார். 21 வயதான கோவையைச் சேர்ந்த திருநங்கை மாடல் அஞ்சலி. . ‘பேர்னபு’ என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளார் . நடிகர் மம்முட்டி தனது முகநூல் பக்கத்தில் அஞ்சலி பற்றி பதிவிடுகையில், “அஞ்சலி அமீர், என் படமான பேர்னபு’வில் என்னுடன் நடிக்கிறார்” என்றும் அறிவித்துள்ளார். மூன்றாம் பாலின சமூகத்தை சேர்ந்தோர் பலர் தங்கள் உரிமைக்காக போராடி வரும் வேளையில் . அஞ்சலி பல ஆண்டுகளாக பாலின உரிமைகள் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். ஒரு மாடலாக வலம் வரும் அஞ்சலி அதில் வெற்றிக் கண்டு தனக்கான பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்.“. மம்முட்டியுடனான தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொணடுள்ளார் அஞ்சலி -மம்முட்டியுடன் நடித்தது ஒரு சிறந்த அனுபவத்தை எனக்கு கொடுத்தது. அவரிடம் இருந்து திரையுலகம் பற்றியும் நடிப்பு பற்றியும் கற்றுக்கொண்டேன். அவருடன் நடிக்கும் போது சற்று பதற்றத்துடன் தான் இருந்தேன். ஆனால் மம்முட்டி அவர்கள் என்னிடம் அன்பாகவும் மிகவும் உதவியாகவும் இருந்தார்” என்கிறார் திருநங்கை அஞ்சலி“ thanks -Think Change India,yourstory.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *