சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேலும் மனம் தளராத 3 பெண்களும் நீதிமன்ற தீர்ப்பும்!

கணவர்களின் துணைஇன்றி வாழும் பெண்கள் சந்திக்கும் சவால்களை, அவமானங்களை, புறம்பேசல்களை, பாதுகாப்பு கெடுபிடிகளை கடந்து, 9 வருடங்கள் மனம் தளராது போராடிய பெண்களுக்கு கிடைத்த வெற்றி காணாமல் ஆக்கப்பட்ட பலரின் உறவினர்களுக்கு கிடைத்த வெற்றியும் நிவாரணமுமாக கருத வேண்டும். போராடியவர்களுக்கும் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேலுக்கும் வாழ்த்துகள்!ஆட்கொணாவு மனு மீதான வவுனியா மேல் நீதிமன்றின் கட்டளை இராணுவத்தினருக்கு எதிரானதாகவுள்ளமை, மிகப்பெரிய வெற்றி என சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னிலைப்படுத்தவும் அல்லது காரணம் கூறவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.“கந்தமான்” என்ற பொன்னம்பலம் கந்தசாமி, “எழிலன்” என்ற, சின்னத்துரை சசிதரன், “கொலம்பஸ்” என்ற உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் ஆகியோர் தொடர்பாக குடும்பத்தினரால் தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல்,இதன் பிரகாரம் காணாமல் ஆக்கப்பட்டவர் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கான சான்றுகள் இருப்பதில் மன்று திருப்தியடைந்து, அவர்கள் இராணுவத்தினரின் வசம் இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்ற தொனியில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் அல்லது அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை விளக்கவும் எதிர்வரும் மாதம் 22 ஆம் திகதிக்கு வழக்குகள் திகதியிடப்பட்டுள்ளன.மேலும் ஆட்கொணர்வு மனுமீதான கட்டளை இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானதாக ஆக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி. ஏனெனில் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் தங்களுடைய உறவினர்களை தேடி வந்த பயணம் 2013 இல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 9 வருடங்களுக்க பின்னர் பூரணமாக நிறைவடைந்துள்ளது.

இலங்கை இராணுவத்தினர் இதற்கான காரணத்தினை சொல்லியே ஆகவேண்டும் எனவும் பொறுப்புக்கூறல் அவர்களை சார்ந்தது எனவும் கூறிய அவர், இதனை நீதிமன்றத்தின் மூலம் கிடைத்த ஒரு வெற்றியாகவும், நிவாரணமாகவும் கருதவேண்டியுள்ளதாகவும் வலியுறுத்தி உள்ளார்.அத்துடன் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன, அதனால், இனிமேலாவது காணால் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மட்டுமல்ல மேலும் பல விடயங்கள் தொடுர்பாக பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் சுட்டிக்காட்டியிருக்கிறார்

.Thanks Nadarajah Kuruparan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *