ஆணாதிக்க அரசியலையே முன்னிறுத்துகின்றனர் … என்கிறார் ரோஹினி!

பிரிதி சபாநாயகராக பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்கிற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை, அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த ஆளுந்தரப்பினரே தோற்கடித்துள்ளதாகவும், பிரதமர் ரணில், ராஜபக்ஸர்களின் கைபொம்மையாக மாறியுள்ளார்.

எனவே ரணில் விக்கிரமசிங்கவின் தோல்விகள் இன்று (17.05.22) முதல் ஆரம்பிக்கின்றது எனவும், அரசாங்கத்தின் தோல்விகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகிறது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரதன தெரிவித்தார்.

சபாநாயாகர், பிரதி சபாநாயகர் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு நாடாளுமன்றத்தில் இதுவரையில் பெண்கள் தெரிவு செய்யப்படவில்லை. உலகின் முதற் பெண் பிரதமராக, நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதிக்கும் பெண்ணை தெரிவு செய்த நாட்டில், பாராளுமன்றத்துக்குள் பெண்களை உயர்பதவிகளுக்கு நியமிக்க முடியாதென்பனை ஆளுந்தரப்பினர் உலகுக்கு காட்டியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *