வல்லமை சமூக மாற்றத்திற்கான இயக்கம் கார்த்திகை 25 தெடக்கம்- மார்கழி 10 வரை 16 நாள் செயல்வாதத்தினை முன்னெடுத்து வருகின்றது

அதன் தொடர்ச்சியாக 3 ம் நாளான 27.11.2020 அன்று மாலை 04.00 மணியிலிருந்து 6 மணிவரை வல்லமை யின் பயணங்களில் ஒன்றாகிய சிறார்களை ஒன்றிணைத்த ஆளுமைத்துளிகளின் பயணிகளும், வல்லமை பயணிகளும் இணைந்து சிறுவர்களுக்கான வாசிப்புத்திறனை ஊக்குவிப்பதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. அதில் சிறுவர்களுக்கே உரித்தான அறிந்திறன் புத்தக அறிமுகமும் மற்றும் அதில் உள்ள ஆக்கங்கள் வாசிக்கப்பட்டது, பாடல்கள் பாடப்பட்டது. மேலும் பெண்கள் சிறுவர்கள் அபிவிருத்தியில் மகிழ்வுடன் பங்களிப்புச் செய்தலும் இணைந்து பயணித்தலும் என்கின்ற சிந்தனைப்பகிர்வுடன் கலந்துரையாடல் தொடர்ந்தது. (நன்றி வல்லமை யாழ்ப்பாணம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *