போருக்குப் பின்னரும் தமிழ் ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள்

allprojectஇலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும்இ தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் குறிப்பாக ஆண்கள் பாலியல் வதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அனைத்துலக மனித உரிமை அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த All Survivors Project என்ற ஆய்வு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ஆண்களும், இளைஞர்களும் ஒருபாலுறவு பாலியல் தொல்லை என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் இதுபற்றி வெளிப்படுத்த முன்வருவதில்லை.அதுகுறித்த தகவல்களும் வெளிவருவதில்லை. போரின் போதும் போருக்குப் பின்னரும் தமிழ் ஆண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட ஆண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் கூறியிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *