சிறைக்கம்பிகளில் சிக்கிய ஓர் இளம் பெண்

சமீலா யூசுப் அலி (மாவனல்ல, இலங்கை) 2009 july -12 ஊடறுவில் பிரசுரமானது

-சிறைகளில் அடைக்கப்பட முன்னர் –

aafia.jpg 2 சிறைகளில் அடைத்த பின்னர்  –Guantanamo bay prisoner No. 650

aafia.jpg 1

மார்ச் 30.2003 அன்றைய காலையும் அமைதியாகத்தான் விடிந்தது. பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள குல்ஷனே இக்பால் பகுதியிருந்த தன் தாய் வீட்டிலிருந்து ராவல்பிண்டிக்கு செல்ல டக்ஸியில் ஏறுகிறார் டொக்டர் ஆஃபியா. அவருடன் 7 வயதான மகன் அஹ்மத் 5 வயது மகள் மர்யம்.வாகனத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.டொக்டர் ஆஃபியாவின் மடியில் 6 மாதங்களே நிரம்பிய குழந்தை சுலைமான் .விமானநிலையம் நோக்கிச் சென்ற ஆஃபியா குழந்தைகளுடன் காணாமல் போகிறார். செல்லும் வழியிலேயே பாகிஸ்தானின் உளவுத்துறையினரால் (Pakistani intelligence agencies )மடக்கப்பட்டு American Federal Bureau of Investigation (FBI யிடம் ஒப்படைக்கப்பட்டார் என்கின்றன ஊடகங்கள்.

இதற்கு முன்னதாக ,மார்ச் முழுவதுமே அமெரிக்க ஊடகங்களில் டொக்டர் ஆஃபியா சித்தீகி சம்பந்தமான தகவல்கள் வெளியாகத்துவங்கின.அல்காயிதாவுடன் நெருக்கமானவர் என்ற முத்திரை குத்தி FBI இனால் தேடப்படும் நபராக ஆஃபியாவின் புகைப்படங்கள் அமெரிக்க தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பப்பட்டன.

சொல்லி வைத்தாற் போல் ஒரிரு நாட்கள் கழித்து அமெரிக்காவின் செய்தி ஊடகமான FBI இதனது பாணியில் செய்திகளை வெளியிடத்தொடங்கியது. டொக்டர் ஆஃபியா, உஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் எங்கிருந்தாலும் உடனடியாகFBI க்கு அறியத்தருமாறும் திரும்பத் திரும்ப அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டன.

டொக்டர் ஆஃபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸசூசெட்ஸ் நிறுவனத்தின் உயிரியல் பட்டதாரி.அவரது முனைவர் பட்டத்துக்காக ப்ரெண்டிஸ் பல்கலைக்கழகத்தில் ‘நடத்தைசார் நரம்பியல் விஞ்ஞானத்தினை’ பாடமாக எடுத்து கலாநிதி பட்டம் பெற்றவர்.தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளும் போது ‘பாகிஸ்தானை இஸ்லாமிய மயமாக்கலும் பெண்களின் மீது அதன் தாக்கமும்’என்ற ஆய்வுக்காக ‘கரோல் வில்ஸன் விருது’பெற்றவர்.

ஆஃபியாவின் தந்தை பிரிட்டனில் கல்வி பயின்ற ஒரு மருத்துவர்.அவரது மூத்த சகோதரர் ஓர் கட்டடக்கலை நிபுணர்.மூத்த சகோதரி ஒரு பெண்மருத்துவர்.ஆஃபியாவின் கணவர் அமெரிக்க மருத்துவமனையொன்றில் நினைவு மாற்றும் வைத்தியராக பணிபுரிந்தார்.1990 ஆண்டிலிருந்தே ஆஃபியா அமெரிக்காவின் பொஸ்டன் என்ற இடத்தில் அவரது பெற்றோரோடு வசித்து வந்தார்.2002 இல் அவர் பாகிஸ்தான் திரும்பினார்.பொருத்தமான தொழில் கிடைக்காத காரணத்தால் 2003இல் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்று சில நிறுவனங்களை நோக்கி தொழில் தேடி விண்ணப்பித்த ஆஃபியா தனக்கான கடிதங்கள் கிடைக்கப்பெறுவதற்காக ஒரு தபால்பெட்டி இலக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.இக்காலப்பகுதியிலேயே அவரை அல்காய்தாவுடன் தொடர்பு படுத்தி அதிதீவிரமாக தேடப்படும் நபர்களில் ஒருவராக அமெரிக்க ஊடகங்கள் பிரச்சாரம் செய்யத்துவங்கின.ஆஃபியா மீண்டும் தாயகம் திரும்பினார்.

திடீரென ஆஃபியா காணாமல் போனதை அடுத்து பாகிஸ்தானிய ஊடகங்கள் பரபரப்படைந்தன. 2003 ஏப்ரல் 1ந்திகதி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் பைசல் சாலிஹ் டொக்டர் ஆஃபியா கைது செய்யப்பட்டிருப்பதை அவசர அவசரமாக மறுத்துள்ளார்.

அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 2 2003 இல் வேறொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதே கேள்விக்கு இதே அமைச்சர் அளித்த பதில் வேறு மாதிரியாக இருந்தது.டொக்டர் ஆஃபியாவுக்கு அல் காய்தா தொடர்பிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்தார்.கராச்சியின் பிரபல ஆங்கில இதழில் ஒரு சிறப்புச்செய்தி வெளியானது.டொக்டர் ஆஃபியா பற்றிய அமைச்சரின் பேட்டி வெளியானதை அடுத்து ஆஃபியாவின் தாயார் தன் மகள் பற்றிய குற்றச்சாற்றை முழுமையாக மறுத்துள்ளார். ஒருவாரத்திற்குப் பின் உளவுத்துறையினர் டொக்டர் ஆஃபியாவின் வீடு தேடி வந்து ‘உங்கள் மகள் காணாமல் போனதைப் பற்றி நீங்கள் பெரிதுபடுத்துவதால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!’ என்று டொக்டர் ஆஃபியாவின் தாயாரை மிரட்டி விட்டுச்சென்றனர் என்பதே அது.

ஆஃபியாவைப்பற்றி அவரது சக பல்கலைக்கழக மாணவர்கள் சொல்லும் போதுமிக மென்மையான உணர்வுகளும் இரக்க சுபாவமும் கொண்ட ஒரு பெண்மணியாக வர்ணிக்கிறார்கள்.ஒரு கூட்டத்தினிடையே ஆஃபியா தனித்து விளங்கக்கூடிய அளவுக்கு தோற்றமோ அல்லது தனித்துவமோ வாய்ந்தவர் அல்ல.ஆனால் ஆழ்ந்த இஸ்லாமியப்பற்றும் தஃவா உணர்வும் கொண்டவர்.சிறைச்சாலைக்கைதிகளுக்கும் பாடசாலை பல்கலைக்கழகங்களுக்கும் குர் ஆன் பிரதிகளை தானெ எடுத்துச்சென்று விநியோகிப்பவராகவும் ஒரு சுதந்திரமான பெண்ணாகவும் அவரைக்கண்டதாக அவரது தோழிகள் வர்ணிக்கிறார்கள்.

ஒரு முறை ஆஃபியா தன் பிரதேசப்பள்ளிவாயிலில் பொஸ்னிய முஸ்லிம்களுக்காக உதவி செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்தாராம்.அசையாதிருந்த பார்வையாளர்களை நோக்கி’உங்களில் எத்தனை பேருக்கு ஒரு சோடிக்கு மேல் பாதணி இருக்கிறது’என்று கேட்க எல்லாக் கைகளும் உயர்ந்தனவாம்.’உங்கள் பாதணிகளை தருமம் செய்யுங்கள்.பொஸ்னிய முஸ்லிம்கள் கடுமையான் குளிர்காலத்தை எதிர்நோக்கியுள்ளனர்’என் ஆஃபியா சொன்ன வார்த்தைகளின் உணர்வைத்தாங்க முடியாமல் பள்ளிவாயிலின் இமாமும் கூட பாதணியைக்கழட்டினாரம்.

டொக்டர் ஆஃபியாவிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில் ஆப்கானிஸ்தானின் பக்ரம் ( (Bagram) சிறையில்  Prisoner  650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்ரவதைப் படுத்தப்படுவதாக செய்திகள் கசியத் துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் தொடர்ந்து கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து சுயாதீன ஊடகங்களின் பார்வை அந்தப்பக்கம் திரும்பியது.மீடியாக்களின் அழுத்தம் தாங்க முடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி ஆதாரங்களை முன்வைத்துள்ளார். அதன்படி Prisoner   650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சிறைக் காவலர்களால் தொடர்ந்து வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. கொடுமையின் உச்சகட்டமாக prisoner No. 650 என்ற அப்பெண் பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டார் என்றும் ஆண் கைதிகளின் முன்னிலையில் தன் இயற்கை உபாதைகளை நிறைவேற்றப் பலவந்தப்படுத்தப்பட்டார் என்றும் அதனால் ஆண் கைதிகள் அவரை பெண்கள் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த 4 ஆண்டுகளாக விவரிக்க இயலா அளவிற்கு இவ்வாறு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர் ஜூலை 6 2008 இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையாளரான இவான் ரிட்லி. செய்தி சேகரிப்பு ஒன்றிற்காகச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் இச்செய்தியைப் பத்திரிகையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து வெளி உலகிற்குக் கொண்டு வந்து உதவிக்கரங்கள் நீள வேண்டுமென்ற உறுதியான குரல் கொடுத்துள்ளார்.

‘அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஏனெனில் அப்பெண் பார்ப்பதற்கு ஒரு பிசாசு போன்றிருந்தாள். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம்’ என்று மனம் வெதும்பினார் இவோன் ரிட்லி.

அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் பாகிஸ்தான் விரைந்தார்.இதே வேளை முஆசம் பெக் என்ற முந்தைய குவாண்டனமோ சிறைவாசி தன் சிறை அனுபவங்களை நூலாக எழுதியிருந்தார்.தான் இஸ்லாமாபாத்தில் வைத்து பெப்ரவரி 2003ல் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
தனது அறைக்குப் பக்கத்து அறையில் ஒரு பெண் பல ஆண் காவலர்களால் கொடுமைப் படுத்தப் படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஜ ஸ்டிஸ்கட்சியின் தலைவராக உள்ள இம்ரான் கான் கொடுமைகளைச் சந்திக்கும் அப்பெண் டாக்டர் ஆஃபியாதான் என்று தனது ஐயத்தினை வெளிப்படுத்தினார்.

2008 ஓகஸ்ட் 4ந்திகதி அமெரிக்க அரசு ஆஃபியா சித்தீகி ஆப்கானில் வைத்து கைது செய்யப்பட்டதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது.ஜூலை 17 ந்திகதி பாரியளவிலான தாக்குதலுக்கான வரைபடங்களுடனும் குண்டு தயாரிப்பிற்கான குறிப்புக்களுடனும் அவரையும் அவரது மூத்த மகனையும் கைதுசெய்ததாக அறிவித்த அமெரிக்கா 18ந்திகதி ஆஃபியா அமெரிக்க அதிகாரி ஒருவரை அவரது துப்பாக்கியைப் பறித்து சுட்டுக்கொலை செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தியது.அத்தோடு அமெரிக்க அரசு ஆஃபியா கடந்த 5 வருடங்களாக எங்கிருந்தார் என்பது தனக்குத் தெரியாது என்று முழுப்பூசணியை சோற்றில் மறைத்தது.

ஒகஸ்ட் 4ந்திகதி ஆஃபியா அமெரிக்காவின் நிவ்யோர்க் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.அவரது தோற்றம் முழுமையாக மாறியிருந்தது.சக்கரநாற்காலியொன்றில் ஆஃபியா கொண்டு வரப்பட்ட காட்சி அங்கிருந்தோரையெல்லாம் கண் மல்கச்செய்து விட்டது.சிறைச்சாலை சீருடை குவாண்டனாமோவில் அணிவிப்பது போன்ற கையில்லாத மேலங்கி.அதற்கு மேலால் பக்கத்திலிருந்த ஒருவரிடம் ஒரு துணியை வாங்கி தலையையும் எலும்பில் சதை போர்த்தியது போன்ற கரங்களையும் மறைத்துக்கொண்ட ஆஃபியாவின் இஸ்லாமிய உணர்வு கண்டு பார்வையாளர்கள் ஸ்தம்பித்தனர்.

டொக்டர் ஆஃபியா சிறையிலிருந்த போது அவரது ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டுள்ளதோடு அவரது மனநிலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என அவரது வழக்குறைஞர்கள் சொல்கிறார்கள். அவரது உடம்பிலிருந்த துப்பாக்கிச்சூட்டுக்காயத்தில் இரத்தம் உரைந்து சரியாகக் கவனிக்கப்படாமல் சகிக்க முடியாமல் இருந்ததோடு பற்களும் உடைக்கப்பட்டுள்ளனவாம்.மூக்கு உடைக்கப்பட்டு உதடு கிழிந்துள்ள ஆஃபியா வின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 23 .2009 நிவ்யோர்க் நீதிமன்றத்தில் ஆஃபியாவின் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.டொக்டர் ஆஃபியாவின் வழக்கில் அவர் இன்னும் நிரபராதியாக கொள்ளப்படவில்லை என்பதை 2009 மே வரையிலான இணையச்செய்திகளிலிருந்து அறிய முடிகிறது.அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட கடூழியச்சிறை அவரை அழைக்கும். அமெரிக்காவின் பார்வையில் எது குற்றமாகக் கொள்ளப்படும் என்பது நமக்குத் தெரிந்ததே.

டொக்டர் ஆஃபியாவுக்காக ஏந்தப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கரங்களோடு எம் கரங்களும் இணையட்டும்.ஆஃபியா சித்தீகி என்ற நம் சகோதரிக்காய் உதவ விரும்புவோர் இந்தத் தளத்தை இணையத்தில் சொடுக்குங்கள்.

-http://freedetainees.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *