நான் வரைபவனின் மனைவி…

யோகி

வரைபவனின் மனைவியை

வரைபவனின் மனைவி என்றே

வரையறுக்கிறார்கள்

அதைத்தவிர வேறு அடையாளங்கள்

அவளுக்கு வழங்கபடுவதில்லை

வரைபவனின் மனைவி

கவிதை வரைகிறாள்

நடனம் ஆடுகிறாள்

பாடல் இசைக்கிறாள்

உணவு சமைக்கிறாள்

புதிர் போடுகிறாள்

நூதனமான சில விஷயங்களை

அசாட்டையாக செய்கிறாள்

இருந்த போதிலும்

வரைபவனின் மனைவியாகவே

அவள் அறியப்படுகிறாள்

தன் அடையாளத்தை குறித்து அவள்

சில சமையம் அமைதி இழக்கிறாள்

வரைபவனின் தூரிகைகள்

பாம்பாய், புழுவாய், புல்லாய், மண்ணாய்ப்போக

கனவு காண்கிறாள்

வர்ணங்கள் வர்ணம் இழக்க சாபமிட்டு

கனவை கலைக்கிறாள்

வரைபவனின் மனைவி

அடையாளம் என்ற

ஒன்றுக்கு அடையாளம் என்பதைத்தவிர

வேறென்ன இருக்கிறது

என்று குறிப்பு எழுதிவைத்து

உணர்ச்சியற்று நாட்களை நகர்த்துகிறாள்

நான் இன்னும் வரைபவனின்

மனைவியாகவே இருக்கிறேன்…

 

http://yogiperiyasamy.blogspot.ch/2015/02/blog-post_17.html?spref=fb

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *