யட்சி

யோகி சந்துரு (மலேசியா)

நீயே வடிவமைத்த
இந்த உலகத்தில்
நான் நிலமாக இருந்தேன்
என்மேல் நீ
அத்தனை வன்முறைகளையும் செலுத்தினாய்
அடுத்தடுத்து
நீ உழுத நிலத்தில்
நானே விதையானேன்
பயிரானேன்
அறுவடையானேன்
உனக்கு
உணவானேன்
ஒவ்வொருமுறையும்
விதவிதமான வன்முறைகளை
சந்திக்க வைத்தாய்
வன்முறைகளால் -எனை
பெருநிலமாகவும் மாற்றினாய்
நான்
அப்பெருநிலத்தை
வனமாக்கி
அந்த வனத்தில் அமர்ந்துவிட்டேன்
ஒரு யட்சியாக

 

-நன்றி –யோகியின் தேடல்கள்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *