ஒரு கூடை சோகம்…..

 -ஜசிமா

சூரியனை நம்பி
விளக்கை தொலைத்தவள் நான்
இருள் என்னை கொல்லும்போதெல்லாம்
வராத நிலவையும் சபித்துக்கொள்கிறேன்
பொது நலவாதியென்ற போர்வையில்
என் தவறை மறைத்தபடி….
கொட்டிக் கிடந்த சந்தோசங்களைப்
பொறுக்கத் தெரியாத சோம்பேறியாய்
ஒரு கூடை
சோகங்களை சுமந்து கொண்டவள் நான்…
உறவென்று நினைத்து
பிழைக்கு சரிபோட்ட பாவம்
விடாமல் துரத்துகிறதென்னை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *