துயரம் விழுங்கிய துணிகர விபத்து

யாழினி யோகேஸ்வரன் (இலங்கை)

மண் சுவாசித்த மனித உயிர் அத்தனையும்-இன்று

மண்ணுள் வாசிப்பின்றிக் கிடக்கின்றன.

ஆதாரமற்ற அருவங்களாய்,

உருவங்கள் தொலைத்து உருக்குலைந்தே போயின

உழைத்து வலித்த உடல்கள்.

புகை மூட்ட இடைவெளியில் கண் இமைப் பொழுதுகளில் -எம்

கண் விட்டு மறைந்தன மொத்தமாய் உயிர்கள் எல்லாம்.

உழைத்து,உழைத்து உரமேறிய உடல்கள்

மனம் மரத்த போதும்,

மண்ணோடு வலிந்து போரிட்டும்,

கடைசிக் கணங்களில் மாண்டே போயின.

உடல் வருத்தி, உளம் களைத்த

கொழுந்து யாசகர்கள்

மண்ணுள் புதைந்த கணம் சிலவெனினும்,

துளிர்விட்டு எழும் காலம் நெடுவாகலாம்.

மிக மிக நெடுவாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *