என்னைமட்டுமல்ல தோழர்களே

த.எலிசபெத் (இலங்கை)

கட‌ந்த காலங்கள் ஒரு
காவியக்காலந்தான் -அதில்
நட‌ந்த பாதையிலே சில‌
நாவிழந்த மொழிகள்தான்

விழுத்திய தருணங்கள்

கொளுத்திய அனல்களில்
அழிந்துபோன அன்றாடங்கள்

மீண்டும் ஒரு பொற்காலம்
மீண்டு வருமென்றோரெண்ணம்
ஆண்டுகொண்டிருக்கின்றது -என்னை
ஆளவைத்துக்கொண்டிருக்கிறது

என்னைமட்டுமல்ல தோழர்களே
உங்களையும் தான்
நிமிர்ந்து பாருங்கள் நாளை
நாமும் ஜெயிப்போம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *