82 வயதான ஆலிஸ் மன்றோக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

ர்மிதா நோர்வே

82 வயது எழுத்தாளருக்கு நோபல் பரிசு!

கனடாவைச் சேர்ந்த  பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோ இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு  இவ்வருடம்   தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கும் ஆலிஸ் மன்றோவுக்கு 82 வயதாகிறது. நோபல் பரிசுக் குழு வியாழனன்று (10 அக்டோபர் 2013) மாலை ஸ்டாக்ஹோம் நகரில் இத்தகவலை அறிவித்துள்ளது.

82 வயது எழுத்தாளருக்கு நோபல் பரிசு!

நலிந்த பிரிவு மக்களின் சமூக அங்கீகாரத்திற்கான  ஏக்கத்தை யதார்த்தம் ததும்பும்  சிறுகதைகளாக வடித்திருக்கும் ஆலிஸ்இ இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் முதல் கனடா நாட்டவர்  என்பதும் இங்கு குறிப்படத்தக்கது.. 110 ஆவது இலக்கிய நோபல் பரிசைப் பெறும் நோபல் பரிசைப் பெறும் பெண்களின் வரிசையில் 13 வது இடத்தைப் பெற்றுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *