மலையகமும் தோட்டஉட்கட்டமைப்பும் ஒருநோக்கு

 சை.கிங்ஸிலிகோமஸ்
  

  மலையகதோட்டதொழிலாளர்களின் சம்பளஉயர்வும் கூட்டுஒப்பந்தமும் நடந்து முடிந்த சிலநாட்களுக்குள் இலங்கை தோட்ட முகாமையாளர்களின் சங்கம் டிக்கோயா தரவளை விளையாட்டு கழக கேட்போர் கூடத்தில் பிரதேச ஊடகவியலாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. 2013.05.19 ஆம் திகதிகாலை 10.00 மணிக்கு மேற்படி செயலமர்வில் தோட்ட முகாமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் டிரஸ்ட் நிறுவனத்தின் நுவரெலியா பிராந்திய முகாமையாளர் ,வைத்தியர் ரவியும் உரையாடினர். வைத்தியர் ரவி தனது உரையில் மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும், சுகாதார வசதிகள், பிள்ளை பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பாகவும் உரையாற்றினார். அவரது உரையில் தோட்டத் தொழிலாளர்களின் மலசல கூட வசதிகள் நவீனமயப்பட்டிருப்பதுவும் அவை 90 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும்  கூறினார். அவர் வழங்கிய தரவுகளையும் 2013 ஆம் ஆண்டின் நுவரெலியா பிரதேசசெயலகம் தயாரித்து வழங்கியுள்ள தரவுகளையும் நோக்கும் போது பாரிய வித்தியாசத்தினை காணக் கூடியதாகள்ளது

 100 வீதம் அனைத்துமக்களுக்கும் தனியானமலசல கூடங்கள் இருக்கக் கூடிய பிரதேசங்களாக நுவரெலியா பிரதேசசெயலகத்திற்குட் பட்ட பிரதேசங்களில் பெரகும் புர பிரதேசமும் ,ருவன் எலிய பிரதேசமும், மீபிலி மானபிரதேசமும், பட்டி பொல பிரதேசம்,கந்தபலை கல்பால மபிரதேசமும், நுவரெலியா நகர பிரதேசமும், புளு எலபிரதேசமும் இனங்காணப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களில் அதிகமாகதனியானமலசல கூடங்கள் இல்லாமல் இருக்கும் பிரதேசங்களில் திம்புலபிரதேசம் 621 குடும்பங்களும்,டயகமபிரதேசத்தில் 494 குடும்பங்களும்,வொவெல் பிரதேசத்தில் 362 குடும்பங்களும் காணப்படுவதாகஅடையாளம் காணப்பட்டுள்ளது. மொத்தத்தில் நுவரெலியாபிரதேசசெயலாளர் பிரிவில் 5182 குடும்பங்கள் தனிமலசல கூட வசதியில்லாமல் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. மேற்படிதரவுகளின் படிதோட்டம்,நகரம்,கிராமம் என்னும் அடிப்படையில் நோக்குமிடத்துதோட்டபிரதேசங்களிலேயேஅதிகமலசல கூட வசதி இல்லாமை இனங்காணப்பட்டுள்ளது. மேற்படிதரவுகள் நுவரெலியாபிரதேசசெயலகத்தில் இருந்துபெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

நுவரெலியா மாநகரசபைக்குட்பட்ட மத்தியநகரப் பகுதியை தவிர்ந்த பம்பரக்களை பிரதேசமும் அங்குகண்டி,நுவரெலியா பிரதான பாதைக்குகீழ் காணப்படும் தோட்டகுடியிருப்புக்களாய் இருந்து P.று.னு தொழிலாளர்கள் வாழும் லயன் அரைகளில் வாழும் மக்கள் பலவருடகாலமாகமலசல கூட வசதியில்லாமல் வாழ்வதுவும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 41 குடும்பங்களுக்குபொதுமலசல கூட வசதி இல்லாமை குறிப்பிடத்தக்
தலவாக்கலை, லிந்துலை நகரசபைக்கு உட்பட்டபகுதிகளான தலவாக்கலை, லிந்துலை, ஹொலிவூட், பெயார்வெல் போன்ற பிரதேசங்களில் மொத்தமாக 235 குடும்பங்களுக்கு தனியான மலசல கூட வசதிகள் இல்லாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.
                   

நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட் பட்டமக்களில் 11510 பேர் பொதுமலசல கூடங்களை பாவித்து வருவதுடன் 34859 மலசல கூடங்களின் கழிவுகள் பொதுவான நதிகள், பொது வடிகால்கள், வாய்க்கால்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் இவ்வாறான துர்பாக்கிய நிலைமை காரணத்தினால் மலையகத்தில் கடுமையான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன் மலையகமக்களின் இருப்பின் ஸ்தீரதன்மைக்கும் அச்சுறுத்தலாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
       

தனியான வீடு,வீட்டிற்கு தேவையான மலசல கூடம் ,வீட்டுரிமை என்பவை இன்னும் எத்தனை ஆண்டுகாலத்திற்கு கனவாகவே இருக்கப் போகின்றது என மலையகதோட்டத் தொழிலாளர்கள் ஏங்கித் தவிப்பது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *