தீண்டப்படாதவன் பேசுகின்றேன்!

dalit_woman_312  சாதி; சாதியம்; சாதியச் சிக்கல்; (சாதியொழிப்பு கூட அல்ல) போன்ற சொற்கள் பொது இடங்களில் உச்சரிக்கப்படும் பொழுது, ஒரு சாதி இந்து, வந்த வழியை சபித்துக் கொள்கின்றான். அந்தச் சொற்கள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களின் நீதிக்காகவே, இப்படிப் பச்சையாக நிர்வாணமாக ஒலிக்கப்படும் என்பதை அவன் எப்போதும் புரிந்து வைத்திருக்கின்றான்.

 சாதி; சாதியம்; சாதியச் சிக்கல்; (சாதியொழிப்பு கூட அல்ல) போன்ற சொற்கள் பொது இடங்களில் உச்சரிக்கப்படும் பொழுது, ஒரு சாதி இந்து, வந்த வழியை சபித்துக் கொள்கின்றான். அந்தச் சொற்கள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்களின் நீதிக்காகவே, இப்படிப் பச்சையாக நிர்வாணமாக ஒலிக்கப்படும் என்பதை அவன் எப்போதும் புரிந்து வைத்திருக்கின்றான். அதற்கும் மேலாக அந்தச் சொற்கள் தன்னை நோக்கித்தான் முழங்கப்படுகின்றன என்பதைத்தான் ஒரு சாதி இந்துவால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களால் இப்படி சத்தமாக உச்சரிக்கப்படும் அல்லது காரி உமிழப்படும் “சாதி”, தனக்கு சத்தமில்லாமல் சலுகைகளாகவும் அதிகாரமாகவும் இருக்கின்றது என்பதை அவன் ஒப்புக்கொள்ள நேரிடும் என்று அஞ்சுகின்றான். அங்கே அவனது மந்தநிலை அவனைக் காப்பாற்றிவிடுகின்றது. (எல்லா நேரங்களிலும் அல்ல)

dalit_woman_312

அச்சு ஊடகங்களிளும் தொலைகாட்சி ஊடகங்களிலும் பெருமளவு புறக்கணிக்கப்பட்டிருந்த எங்கள் மக்களுக்கு, கட்டற்ற பதிவிடும் தளமாக இணையதளம் கைகொடுத்துள்ளது. அதிகாரமில்லாத, ஒடுக்கப்பட்ட, எங்கள் இளைஞர்களின் பச்சையான பதிவுகளை, தன் நடுவீட்டில் அமர்ந்து வாசிக்கும் ஒரு சாதி இந்து, விளக்கெண்ணையைக் குடித்ததுபோல் உணருகின்றான். இப்படி அவன் தொண்டைக்குழியிலேயே வைக்கப்படும் மருந்தானது, அவனைத் தொந்தரவு செய்யத் துவங்குகின்றது. சாதி-இந்து பேசத் துவங்குகின்றான் அல்லது பேச வைக்கப்படுகின்றான்.

மந்தநிலையின் ஸ்திரத் தன்மையும் வீரியமும்

சமூகம் பற்றிய, சாதி-இந்துவின் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் ‘சுவாரஸ்யமானவை’. சாதி இந்துக்களுக்கும் அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஒருவனின் பைத்தியம் ஆயிரக்கணக்கான பைத்தியங்களுக்கு மத்தியில் முக்கியத்துவம் இழந்துவிடுவதாகச் சொல்கிறார் Haward fast.

அவன் தனது முன்னோர்களை நினைத்துப் பெருமூச்சு விட்டபடிதான் பேசவே துவங்குகின்றான். ‘எல்லாம் மாறிவிட்டது’ என்று வருத்தம் தெரிவிக்கின்றான். எல்லாத்தையும் மாற்ற வேண்டும் என்றும் சபதம் எடுத்துக் கொள்கின்றான்.

சிக்கல் எளிதானது. பிராமணங்கள் சொல்வது போல், பார்ப்பனனின் பிறப்புறுப்பு அக்கினியிலிருந்து தப்பிக்க, ஒரு மன்னன், பார்ப்பனனை தன் அரண்மனையின் அறைகளுக்குள் கட்டுப்பாடின்றி அனுமதிக்க அவசியமில்லை. ஏனென்றால் இன்று மன்னனுமில்லை அரண்மனையுமில்லை, அரண்மனைகளில் பெண்களும் இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களெல்லாம் பண்ணைக்குத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஏனென்றால் பண்ணையார்கள் பெரும்பாலும் தொழிலதிபர்களாகிவிட்டார்கள். சூத்திரனும் தீண்டப்படாதவனும் கல்வி கற்கலாம், யாரும் அவனது காதுகளில் ஈயத்தைக் காச்சி ஊத்தவோ நாக்கை வெட்டவோ மாட்டார்கள். ஏனென்றால் இன்று படித்த அடிமைகள்தான் தேவைப்படுகிறார்கள். இப்படி எல்லாம் மாறிவிட்டது. சாதி இந்துவின் மந்தநிலையைத் தவிர! (ஒரு பிற்படுத்தப்பட்ட சாதி இந்துவிடம், சூத்திரர்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள் பதில்! சுவாரஸ்யமானதாக இருக்கும்) 

ஒரு சாதி இந்து தனது கேள்விக் கணைகளால், எவ்வளவு விஷயம் தெரிந்தவர்களையும் திக்குமுக்காடச் செய்து விடுகின்றான். அக்’கணைகளை’ அவன், தனது மந்தநிலையின் ஸ்திரத் தன்மையை நிறுவுவதாகவும், ‘யாராலும் தனக்கு விளங்க வைக்க முடியாது’ எனும் திமிரோடும் தொடுப்பதே, விஷயம் தெரிந்தவர்களின் பரிதாப நிலைக்குக் காரணமாய் இருக்கின்றது.

முட்டிக்கிட்டுவரும் புரட்சிகர உணர்வை அவனால் கட்டுப்படுத்த முடிவதில்லை. விவாதம் என்ற பெயரில் தொலைகாட்சி ஊடகங்கள் நடத்தும், லாவணிக் கச்சேரிகளில் கலந்து கொள்கின்றான். “ஒரு செருப்புத் தைப்பவனுக்கோ சாக்கடை அள்ளுபவனுக்கோ, ‘உங்கள்’ இடஒதுக்கீடு பயன்படுகிறதா…” என்று கொதிக்கின்றான். புரட்சியைத் தள்ளிப்போட முடியாது என்று அடக்க முடியாமல் துடிக்கின்றான். செருப்புத் தைப்பவனும் மலம் அள்ளுபவனும் யார் என்பதும், அவன் எதற்காக அப்படி இருக்கிறான் என்பதும், இதை ஒளிபரப்பும் ஊடகங்களுக்குத் தெரியாமல் இல்லை. ஆனாலும் இந்தக் கேள்விகள்தான் நிகழ்ச்சிக்கான விளம்பரமாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படும். படித்த இளைஞர்களை இப்படி மடச் சமூகமாக வைத்திருப்பதில் முதலாளித்துவ+பார்ப்பன ஊடகங்களின் பங்கு அளப்பரிய‌‌தாக உள்ளது. அவன் ஒரு சாதி இந்துவாகவும் இருப்பதால் ’அது’ அவனுடைய இயல்பாகவும் இருந்துவிடுகின்றது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, விகிதாச்சார அடிப்படையில் உயர்த்தக் கோரி, பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்கள்/அறிஞர்களும் போராடிக் கொண்டிருக்கையில், பிற்படுத்தப்பட்ட சாதி இந்து, படிக்கும் வேலை பார்க்கும் இடங்களில், இடஒதுக்கீட்டிற்கு எதிராக எங்கள் இளைஞர்களுடன் விவாதச் சண்டையில் இறங்குகின்றான். இட ஒதுக்கீட்டின் நியாயம் பற்றியோ பார்ப்பனியம் பற்றியோ அவனுக்கு விளக்க முயற்சிப்பவர்கள்தான் பாவம். உடனே “எங்கள் ஊரில் ஒரு அய்யர் இருக்கார்…. ” என்று ஆரம்பித்து விடுவான். அவன் கண் முன்னால், கோடானகோடி தாழ்த்தப்பட்ட மக்கள் கொடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டிருப்பார்கள். சாதிக் கொழுப்பிருந்தாலும் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் கூட வறிய நிலையில் வாடிக் கொண்டிருப்பார்கள்…. ஆனால், அந்த ஒத்த அய்யருக்காக அழுதே இவனுக்குக் காய்ச்சல் வந்துவிடும். பாவம் இந்த ஆனைமுத்து அய்யாக்கள்.  

பார்ப்பனர்களின் வாயாக இருந்து, எங்கள் மக்களை வேட்டையாடுவதையே தன் வாழ்நாள்ப் பணியாகச் செய்துவரும் சூத்திர-சாதி-இந்து, புரட்சி நமைச்சலில், “தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் தாழ்த்தவில்லை; ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்று கூறி தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்கிறார்கள்” என்ற தனது ஆராய்ச்சி முடிவை ’பிற்படுத்தப்பட்டவர்கள் / மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்’ பட்டியலில் இருந்துகொண்டு வெளியிடுகின்றான்.

இப்படி, சமூகத்தைப் பற்றி அடிப்படை அறிவே இல்லாத சாதி இந்து, குற்ற உணர்ச்சியில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு 18 நிமிடமும், எங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் மூன்று பெண்கள் கற்பழிக்கப்படுகின்றோம், இரண்டு பேர் கொல்லப்படுகின்றோம், இரண்டு வீடுகளைத் தீவைப்புகளில் இழக்கின்றோம். அத்தனையும் சாதி இந்துக்களின் சண்டித்தனத்தால்!

சங்கிலியும் சம்மட்டியும்

இந்தியப் பொதுச் சமூகம் என்பது தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரகவும், இந்தியப் பண்பாடு என்பது தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கலாகவும் இருப்பது, ஒரு சாதி இந்து, தனது மந்த நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அவசியமில்லாமல் செய்கின்றது. இதனால், ஒரு சாதி இந்து எங்கள் மீது எத்தகைய வன்முறையை நிகழ்த்தும்போதும் தன்னைக் குற்றவாளியாக உணருவதில்லை. என்னதான் சட்டரீதியாகத் தவறு என்றாலும், அரிதாகச் சில நேரங்களில் தண்டிக்கப்பட்டாலும், எங்கள் மக்களை கொலையோ கொள்ளையோ கற்பழிப்போ செய்த ஒரு சாதி இந்து, சமூக ரீதியாக வரவேற்கப்படுகின்றான். மந்த மனிதர்களுள் மாவீரனாக வளம்வருகின்றான்.

dalit_woman_480

எங்கள் மீது ஒடுக்குமுறை செலுத்துவதை, தனது சமூக உரிமையெனக் கருதும் சாதி இந்துவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாத வரை, வன்முறையால் ஒடுக்கப்படும் எங்கள் மக்களின் விடுதலை சுமூகமாக இருக்க வாய்ப்பில்லை. அடக்குமுறைகளுக்கு நிகரான போராட்டங்கள் இல்லாமல், ஒரு சாதி இந்து தன் நிலைப்பாட்டை பரிசீலனைகூட செய்யமாட்டான் என்பதே வரலாறு. சாதி இந்து மந்தநிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள நிச்சயமாக அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படுகின்றது. ஒரு அர்த்தத்தில், சாதி இந்துக்களின் விடுதலையே கூட தீண்டப்படாதவன் கைகளில்தான் உள்ளது. அது எங்கள் எதிர்க் கலகங்களில்தான் உள்ளது.

ஆனால், “வன்முறையை” உச்சகட்ட சமூக அதிகாரமாகப் புரிந்து வைத்திருக்கும் பொதுச் சமூகம், அது தற்காப்புக்காகக் கூட ஒடுக்கப்பட்ட மக்களால் கையாளப்படுவதை ஒரு போதும் விரும்புவதில்லை. சாதி இந்துக்களால், எங்கள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதல்களையும் கற்பழிப்புகளையும் கொலைகளையும் கொள்ளைகளையும் தீவைப்புகளையும் “தாழ்த்தப்பட்ட/ பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைகள்” என்றுகூட அடையாளப்படுத்த விரும்பாத ஊடகங்கள், எங்கள் மக்களின் எதிர்த் தாக்குதல்களை “சாதிக்-கலவரம்” என்று பெயர் சூட்டி, பொதுச் சமூகத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அதற்காக அவைகள் சிரமப்படுவதுமில்லை. நாங்கள் தாக்கப்படும் போது மௌனம் காக்கும் –இன்னும் சொல்லப்போனால் அந்த கொடுமைகளை உள்ளூர அதாரிக்கும்- பொதுச் சமூகம் எதிர்க் கலகத்தின் போது, அனைத்து வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு, ஓடிவந்து கருத்துச் சொல்லிச் செல்ல எப்போதும் தயாராகவே உள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியின் மீதான, பொதுச் சமூகத்தின் விருப்பமின்மையே, வன்முறை தீர்வாகாது. வன்முறையை யார் செய்தாலும்… என்ன இருந்தாலும்… போன்ற நயமான குமுறல்களாக வந்து விழுகின்றன. “என்ன இருந்தாலும்… ” என்ற phrase க்குப் பின்னால் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைச் சிந்திப்பதே கொடுமையாக இருக்கின்றது. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை வன்முறையால் ஒடுக்கப்படுபவனின் எதிர்க் கலகங்கள் வன்முறையே அல்ல என்பதும்.

தொடர்ந்து வாசிக்க  கீற்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *