காணாமல் போன உறவுகள் எங்கே? தீச்சட்டி ஏந்தி உறவினர்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை!

காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் அமைதியான ஊர்வலமொன்றை மேற்கொண்டனர். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட ஊர்வலம் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய கோவில் வரை சென்றது. 

 இதன்போது காணாமல் போன உறவுகளைத் தேடித்தரும்படி மீள வலியுறுத்தி காணாமல் போனோரின் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் தீச் சட்டியை ஏந்தி தமது கோரிக்கைகளை இறைவனிடத்தில் முன்வைத்தனர்.
இதன்போது யுத்தத்திற்கு பின்னரும், யுத்தத்திற்கு முன்னரும் காணால் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்
 
இந்த இறைபிராhத்;தனை மற்றும் தீச்சட்டி ஏந்தும் ஊர்வலத்தில் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கிலும் உள்ள காணமல் போனோரின் உறவினர்கள் பங்குகொண்டனர். அத்துடன் காணாமல் போன பிரபல ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னெலிகொடவின் மனைவியும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு தீச்சட்டி ஏந்தினார்.
 
இந்த ஆர்ப்பாடத்தில் தமிழ் தேசிய முன்னணி, நவசமசமாகஜக் கட்சி, காணாமல் போனோரைக் கண்டறியும் குழு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டதுடன், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நன்றி
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86019/language/ta-IN/article.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *