மெய் முகம்

எஸ்தர் விஜித் நந்தகுமார் (திருகோணமலை; இலங்கை

மெய் முகம்

ஆழ்ந்த உன் கூறியப்பார்வையால்
குதறப்பட்டு வெளிப்படட்டும்
என் போலி முகம்
என்னைக் காலமெல்லாம் கடந்து போனவர்களால்
ஒட்டி விடப்பட்ட பலவிதமான முகங்களை
குதறி கிழித்து விடு!!
சொட்டும் இரத்தம் எனதானதல்ல.
என்னைக் கடந்தவர்களுடையது.
சூரியனாய் எழுந்து கைகளை அகலவிரி,
அகால மண்டலங்களில் உன் கைகளால் துளாவு
தட்டுப்படும் காணாமல் போயிருக்கும்
மெய்முகம்
அள்ளியெடுத்து பதியதாய்
பெயர் சூட்டு.
அதிலே மீண்டும் கறைகள் தெரிந்தால்
முத்தங்களால்
துடைத்தெறி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *