அடக்குமுறையின் உச்ச வெளிப்பாடுகள்

creingtamil போருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் வெளிப்படையாகக் காண்பித்து வருகின்ற புறக்கணிப்பு, மக்களின் நலன்களில் அக்கறை காண்பிக்கப்படாமை போன்றவற்றின் வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோ~சம் எழுப்புகின்றனர். பசிக்கிற பிள்ளைதான் அழும் என்ற மிகச்சாதாரண லொஜிக்கைக் கூட .

போருக்குப் பின்னரான மீள்கட்டமைப்புப் பரிமாணங்களின் நிலையைக் காட்டும் வீழ்ச்சிப் புள்ளியிலிருந்து எழுச்சிக்கான ஒரு வரைபு தொடக்கப் புள்ளியிலேயே அல்லது வீழ்ச்சிப் புள்ளியிலேயே நகராது நீண்ட காலம் நிற்கின்ற நிலையில் அபிவிருத்தியின் இலக்குகளும் மாற்றம் பற்றிய சிந்தனைகளும் முரண்பாடுகளிலிருந்து விலகாதனவாக தோற்றுவாய்களிலேயே தொங்கி நிற்க நிர்ப்பந்திக்கின்றன.

“தமிழர்கள் புலிக்கோஷத்தை, தாயக் கோஷத்தை நிறுத்தாதவரை நமது நாட்டில் அமைதி ஏற்படும் என நினைக்கிறீரா?” என சிங்கள நண்பர் ஒருவர் கேட்டபோது நான் திணுக்குற்றுப் போனேன். தமிழ் மக்கள் இங்கே பதாதைகளுடன் பாதைக்கு இறங்குவதும், பட்டினி ஊர்வலம் செய்வதும் சிங்களவர்களின் பார்வையில் புலிக்கோஷமாக விளங்கிக் கொள்ளப்பட்டதா என்ற கவலையும், தமிழ் சிங்கள மக்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளுக்கு தடையாக இருக்கும் பேரினவாத அரசியல் சித்தாந்தங்கள் குறித்த ஆதங்கமும் ஒன்றுக்கொன்று மிகப்பாரிய தொடர்புகளைக் கொண்டது.

creingtamilபோருக்குப் பின்னரான மீள்கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் வெளிப்படையாகக் காண்பித்து வருகின்ற புறக்கணிப்பு, மக்களின் நலன்களில் அக்கறை காண்பிக்கப்படாமை போன்றவற்றின் வெளிப்பாடாகவே தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோ~சம் எழுப்புகின்றனர். பசிக்கிற பிள்ளைதான் அழும் என்ற மிகச்சாதாரண லொஜிக்கைக் கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக சிங்களவர்களை மாற்றியது, சிங்களப் பேரினவாத அரசியல் முறைமையே என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. ஆயினும், தமிழர்களின் அபிலாi~களை ஏற்றுக் கொள்ளத்தக்க, புரிந்துகொள்ளத் தக்க முற்போக்கு சிங்கள தனிநபர்களும், அமைப்புகளும் இல்லாமலில்லை. இருந்தபோதும் அவர்களால் தமிழ் மக்களுக்கு ஆன அல்லது ஆகக்கூடிய நன்மை என்ன என்பது கேள்வியே. மேலும், இந்த முரண்பாடுகளின் பின்னணியில் தமிழ் தலைவர்களின் தூரநோக்கற்ற செயற்பாடுகளும் நியாயமான செல்வாக்குச் செலுத்தியிருப்பதும் ஏற்றுக்கொள்ளவேண்டியதே. 

போருக்குப் பின்னர் இரு விடயங்கள் மக்களின் இயல்பு வாழ்வுக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது பகிரங்கமானது. ஒன்று, போர்க்காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோர், இறுதிப்போரின்போது சரணடைந்து தடுப்பில் இருப்போர், காணாமல்போனோர். இரண்டாவது, உயர் பாதுகாப்பு வலயங்களினால் குடியிருப்புக்களை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டுள்ளோர், மீள்குடியேற்றப்படாதோர். 

இவ்விரு வகைகளிலும் பாதிக்கப்பட்ட மக்களினது கோசங்களின் பின்னாலுள்ள நியாயங்களை எதன் அடிப்படையிலாவது புறந்தள்ள முடியுமா? தமது சொந்த வீடுகளில் புறத்தான் வாழ்வதையும், சொந்த நிலங்களின் வளங்கள் சுரண்டப்படுவதையும் எத்தனை தசாப்தங்களுக்கு சகித்துக் கொண்டிருக்கமுடியும்? கிழக்கில் திருகோணமலையிலும், வடக்கில் யாழிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், மக்களின் சொத்துக்களையும் இராணுவம் முடக்கியுள்ளது. போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிவுற்ற பின்னரும் உரிய மக்களின் இயல்பு வாழ்வுக்கு வழிசெய்யாதிருப்பதென்பது நேரடியான அடக்குமுறையின் உச்சக்கட்ட வெளிப்பாடு.

Sampur

திருகோணமலை சம்பூர் பிரதேச மக்கள் 2006.04.25ஆம் திகதி இடம்பெயர்ந்தவர்கள். ஆறு மாதங்களில் மீள்குடியமர்த்துவதாக அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட உத்தரவு ஆறு வருடங்களாகியும் அடைய முடியாததாகவே உள்ளது. சம்பூர் கிராமத்தில் வாழ்ந்த 890 குடும்பங்களும்; கூனித்தீவில் 335 குடும்பங்களும் சூரகுடா கிராமத்தில் 170 குடும்பங்களுமாக சுமார் 1395 குடும்பங்கள் அரச உயர் பாதுகாப்பு வலயத்தினால் சொந்த வீடுகளையும், வயல்களையும் இழந்துள்ளனர். 

இவர்களில் 573 குடும்பங்கள் கிளிவெட்டியிலும், 265 குடும்பங்கள் பட்டித்திடலிலும், 180 குடும்பங்கள் மண்சேனையிலும் மேலும் சில குடும்பங்கள் சேனையூர், பள்ளிக்குடியிருப்பு பகுதிகளிலும் தற்காலிக குடியிருப்புகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு உலக உணவு ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டுவந்த உலர் உணவு இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மின்சார, குடிநீர் வழங்கல்களும் விரைவில் நிறுத்தப்படலாம் என்ற சந்தேகங்களும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் யாழ் மாவட்டத்தின் வடமராட்சி வடக்கு கிழக்கு, வலிகாமம் வடக்கு, மருதங்கேணி, யாழ் நகரிலும் சில பிரதேசங்களிலும் இதே நிலையிலேயே மக்களின் குடியிருப்புக் காணிகள் இராணுவத்தால் பலவந்தமாக ஆக்கிரமிப்புச் செய்து உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சுமார் 4, 096 ஏக்கர் குடியிருப்பு காணிகளும், வயல் காணிகளும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் முடக்கப்பட்டுள்ளன. இராணுவம் நிலைகொண்ட வீடுகளில் 50 வீதமானவை மக்களிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்படும் அரசாங்கத் தகவல்கள் வலுவற்றதாகவே கொள்ளப்படவேண்டியுள்ளது. 400 வீடுகளிலேயே இராணுவம் நிலைகொண்டுள்ளதென்றும் அவை விரைவில் உரிய மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்ததை அண்மையில் ஊடகங்களில் காணவும், கேட்கவும் முடிந்தது.

1995 ஆம் ஆண்டு முதல் யாழ் மாவட்டத்தின் வளங்கள் பொருந்திய நிலங்கள் பல இராணுவத்தினரால் நிலைகொள்ளப்பட்டுள்ளன. யாழில் சுமார் 26 ஆயிரம் படையினர் கடமையாற்றியதாக இராணுவத் தகவல்களிலிருந்து அறியமுடிகின்றது. படையினரின் எண்ணிக்கைக்கும், நிலைகொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. “வோர் ஹீரோஸ்” – யுத்த கதாநாயகர்கள் என சமகாலத்தில் போற்றப்படுகின்ற படையினரை நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கான பாரிய வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் கவனத்திற் கொள்ளவேண்டும்.

war-01

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் காணப்படும் அரச காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகளை பிரதேச செயலாளர் பிரிவுகளுடாக மேற்கொள்ளப்போவதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திர சிறி அண்மையில் அரச ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த செய்தியும் இங்கு கவனத்திற் கொள்ளத்தக்கது. இராணுவத்தை வடக்கில் நிரந்தரமாக நிலைகொள்ளச் செய்வதற்கான பிள்ளையார் சுழியே இது.

மக்களின் இயல்பு வாழ்வை முற்றாகப் பாதிக்கின்ற செயற்பாடுகள் மட்டுமன்றி, தமிழ் மக்களின் எதிர்கால அபிலாiஷைகள், இருப்பு என்பவற்றை மேலும் அச்சுறுத்தலான சூழலுக்குள் முடக்குவதற்குமான பாரிய சதியாகவும் இது பார்க்கப்படவேண்டியது. இராணுவ நிலைகொள்ளல் காரணமாக வடக்கில் பொருளாதார முடக்கம், பொருளாதார ரீதியான அப்பட்டமான சுரண்டல் நிலையும், முற்று முழுதாக இராணுவ மயப்படுபத்தப்பட்ட நிர்வாக அமைப்பும் காணப்படுகின்றது. சமூகமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு முழுமையான தடை விதிப்பு, எத்தகைய ஒன்றுகூடல்கள், சமூக செயற்பாடுகளுக்கும் இராணுவத்திடம் அனுமதி கோரவேண்டிய நிலை என்பன இராணுவ நிர்வாகத்தை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கின்றன.

உயர்பாதுகாப்பு வலயங்களினால் வாழிடங்களை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் துயருற்றிருக்கின்ற மக்களும் அவர்களுக்கு ஆதரவாக சமூக நிறுவனங்களும் இணைந்து நடாத்துவதற்கு ஏற்பாடு செய்த ஆர்பாட்டத்திற்கு யாழ் நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துள்ளது. வடக்கில் குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் எந்தவொரு ஒன்றுகூடலை நடாத்துவதற்கும் அவ்வவ் கிராமங்களில் இருக்கின்ற இராணுவ முகாம்களின் அனுமதியைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. ஒன்றுகூடலில் இராணுவ உறுப்பினர்களும் கலந்துகொள்வதுடன், கலந்துரையாடல்களை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கவும் வேண்டுமென்ற கட்டாய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான இச்செயற்பாடுகளில் மக்களின் இயல்புவாழ்வுக்கு பச்சையாகத் தடையாக இருக்கின்ற அடிப்படை உரிமைகளை எதிர்த்து தமிழர் கோஷம் எழுப்புவதென்பது எந்த வகையிலும் நியாயமற்றதோ அல்லது புலிக்கோ~ம் என அடையாளப்படுத்தத் தக்கதாகவோ இராது.

இராணுவ மயப்படுத்தப்பட்ட இந்நடவடிக்கைகளினால் உடைந்து தகர்ந்த வீடுகளில் சுவர்களின் இடிபாடுகளை பாலீதீன் துண்டுகளால் மறைத்தபடி மீளக்குடியேறியுள்ள மக்களும்கூட அசௌகரியங்கள் நிறைந்த, அச்சம் சூழ்ந்த நிலையிலேயே வாழ்கின்றனர். போரின் பின்னர், போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் மிக அத்தியாவசியமான தேவைகளில் உள ஆற்றுப்படுத்துகையும் மிகப்பிரதான இடம் வகிக்கின்றது. போரின் முடிவைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற நடவடிக்கைகளில் அனேகமானவை மக்களின் மனதை கிலேசமடையச் செய்வனவாகவே அமைகின்றன.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் இடம்பெறுகின்ற வீதி புனரமைப்பு குத்தகைச் செயற்பாடுகள்கூட இராணுவ செல்வாக்குடனும், தெற்கிலிருந்து வரவழைக்கப்பட்ட சிங்களப் பணியாளர்களுடனுமே மேற்கொள்ளப்படுகின்றன. சொந்த இடங்களையும், தொழில் செய்வதற்கான வயல் காணிகளையும் இழந்து தொழிலற்று நிற்கும் உள்@ர் மக்களுக்கு அளிக்கப்படவேண்டிய நியாயமான வாய்ப்ப்புக்கூட மறுக்கப்பட்டுள்ளது. இராணுவ உறுப்பினர்கள் வெளிப்படையான வியாபார செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். தொலைத்தொடர்பு நிலையங்களை நடாத்துதல், தெற்கிலுள்ள உற்பத்திகளை சந்தைப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். இது உள்ளுர் உற்பத்திகளுக்கான சந்தைவாய்ப்புகளை இழக்கச் செய்து நேரடியான பொருளாதாரச் சுரண்டலுக்குள் மக்களை முடக்கியுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைக்கோஷங்களை முற்றிலும் புறந்தள்ளிய நிலையில் ஜனநாயகத்திற்கு எதிராகவும், வடக்கை முற்றிலும் இராணுவ நிர்வாகத்தின் கீழ் நிலைப்படுத்துவதற்குமான செயற்பாடுகளின் பல்பக்க வெளிப்பாடுகளே இவை.
மித்ரா
நன்றி சுடர் ஒளி

நன்றி http://srilankaxnews.com/tamil/index.php/modules-menu/item/785

1 Comment on “அடக்குமுறையின் உச்ச வெளிப்பாடுகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *