ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை நிர்வாணமாக்கிய பொலிஸ்!

பல இளம் பெண்களை, சமூக விழிப்புணர்வு, செயற்பாடு, புத்திகூர்மை, கலாசார அபிவிருத்தி அடிப்படையில் ஒன்றிணைய வலியுறுத்துவதற்காக தாம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக கூறுகின்றனர்

உக்ரேன் பெலாரஸ் தலைநகரான மின்ஸ்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பெண்கள்  மூவரை பொலிஸார் நிர்வாணமாக்கிய செய்தி அந்நாட்டு பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
 

மினகிஸ்க் நகரில் இப்பெண்கள் மூவரும்; பல இளம் பெண்களை, சமூக விழிப்புணர்வு, செயற்பாடு, புத்திகூர்மை, கலாசார அபிவிருத்தி அடிப்படையில் ஒன்றிணைய வலியுறுத்துவதற்காக தாம் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக கூறுகின்றனர்.  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அதனால்  அவர்களை கைது செய்த பொலிஸார் அப்பெண்களின் கண்களைக் கட்டி, காட்டிற்கு கொண்டு சென்றதாகவும் பின்னர் அப்பெண்களின் ஆடைகளைக் களைந்துவிட்டு, உடலில் எண்ணையை ஊற்றிவிட்டுச் சென்றதாகவும் பெண்களின்  குழுவினர்  தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற 6 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதாக ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 Comment on “ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை நிர்வாணமாக்கிய பொலிஸ்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *