லண்டன் – ஈழத்துப் புத்தகச் சந்தையும்-தமிழ் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்வும்

-தகவல்- என் செல்வராஜா (லண்டன்)

லண்டன் – ஈழத்துப் புத்தகச் சந்தையும்
தமிழ் எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்வும்
அனுசரணை: அயோத்தி நூலக சேவைகள
 

  

Sri Lankan Tamil Book Fair

and

Tamil Writers-Readers  Get-together

 

காலம்:  16 ஒக்டோபர் 2011  காலை 10.00 முதல் மாலை 7.00 மணி வரை
இடம்: 

Lord Brooke Hall, Shernhall Street, Walthamstow, E17 3 EY

 

புகலிடத்தில் வாசிப்புக் கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எம்மவர்களுக்கு மலிவு விலையில் அண்மைக்கால வெளியீடுகளான ஈழத்துத் தமிழ் நூல்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் முழுநாள் நிகழ்வு.
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களையும் அவர்களது அண்மைக்கால வெளியீடுகளையும் அதற்கான வாசகர்களையும் நேரடியாக ஒரு தளத்தில் கொண்டுசேர்க்கும் நிகழ்வு.
சிறுவர் நூல்கள், வளர்ந்தோர்களுக்கான கலை, இலக்கிய அறிவியல் நூல்கள், தீவிர வாசகர்களுக்கான துறைசார் ஆய்வுநூல்கள், 500க்கும் அதிகமான தலைப்புகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் அவர்களுக்கு வழிகாட்ட முன்வந்துள்ள ஆசிரியர்களையும் பெற்றோர்களையும், படைப்பாளிகளையும், அறிவுஜீவிகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.
எழுத்தாளர்களே, புத்தக வெளியீட்டு நிகழ்வுடன் உங்கள் நூலின் விற்பனைமுயற்சிகள் நின்றுபோவதில்லை. உங்கள் வெளியீடுகளின் சில பிரதிகளுடன் மண்டபத்துக்கு வாருங்கள். உங்கள் வாசகர்களையும் சக எழுத்தாளர்களையும் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்ளவும், உங்கள் நூல்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யவும் மண்டபத்தில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
ஈழத்துத் தமிழ்ப் பதிப்பு-விற்பனைச் சூழலில் புதியதொரு அனுபவத்தை பகிர்ந்துகொள்வோம். ஒக்டோபர் 16 – தவிர்க்கப்பட முடியாத ஒரு நிகழ்வாகட்டும்.

அயோத்தி நூலக சேவைகள்,

Nearest Underground: Walthamstow Central

and

Tamil Writers-Readers Get-together

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *