தவளை ராணி

கி.கலைமகள் (இலங்கை)

தவளை ராணி அந்த நீண்ட பாதையைக்கடக்க

காத்திருந்தாள்

பாதைகளில் பாம்புகள் நெளிந்தன

பாம்புகளை தூங்க வைத்து

பாதையினை கடப்பதற்கு

கதைகள் சொல்ல தொடங்கினாள்

ஒவ்வொரு கதைகளும் நீண்டனபாம்புகளை விட கதைகள் பெருத்தன

கதைகளற்ற தவளைராணி

சோர்ந்தமர்ந்தாள்

எந்தபாம்பாவது தன்னை விழுங்கட்டும் என்று

பாம்புகள் எல்லாம் தவளைராணியை நச்சரித்தன

கதைகள் சொல்ல சொல்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *