வெற்றிகள் உன்னை ஆளட்டும்!

வெலிகம ரிம்ஸாமுஹம்மத் ,(இலங்கை)

துன்பங்கள்
உன் நெஞ்சில்
முட்டுகின்றதா?
துயரங்கள்
உன் கதவைத்
தட்டுகின்றதா?

இதயமே
இடிந்து போனதாய்
சாய்ந்து விடாதே!
எதுவுமே
கிடைக்காதது போல்
ஓய்ந்து விடாதே!

சமயம் வந்தால்
இமயமும்
உன் காலடியில்…
இறைவனின் நாடினால்
நீ புரளலாம்
கோடிகளில்!

உடைந்து போனால்
உன் மனமும்…
கிடந்து அழுவும்
அனுதினமும்!

தோல்விகள் வெறும்
சம்பவம் தான்…
துணிந்திடு தோழா
வெற்றி சரித்திரம் தான்!

நிலா உனக்கு
பன்னீர் தூவும்…
விண்மீன்கள்
வாழ்த்துரைக்கும்!

கானகப் பூக்கள்
உன்னைக் கண்டு
தலையாட்டும்…
விடியலில் உனக்கு
விலாசம் வரும்!

நீ வாழ்வது
புற்களில் என்றால்
பின் எப்படி
சுவர்க்கம் தெரியும்?

தைரியம் கொண்டு
நீயிருந்தால்
இன்பக் கனவுகள்
ஓடி வரும்..
கோழையாக வாழ்ந்திட்டால்
காணாத கவலைகள்
தேடி வரும்!

மானிட வாழ்வு
சிறந்திடத்தான்
அன்பை இறைவன்
படைத்துள்ளான்…
பண்பாய் வாழ்ந்து
வழிகாட்டி
சிறந்திடச் சொல்லி
அவன் சொன்னான்!

போராட்டமான
உன் வாழ்வு
பூந்தோட்டங்களாய் மாறட்டும்…
வெற்றிகள் என்றும்
உன் வாழ்வில்
புதுமையாக ஆளட்டும்!!! 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *