யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு)
கடவுளை வஞ்சிக்கிறேன்
என் பூவுலக பிறப்பிற்காக
ஆத்மார்த்தமான பொழுதுகளில்
அழுந்திக் கொள்ளும் மனம் அழுத்தமாக
சொல்லிக்கொள்கிறது கைப்பற்றிவிடு முழுமையாக என்று,
துறத்தல் எமக்கு பழையதாகி விட்டது.
வீடு துறந்து,
உடமை துறந்து,
உரிமை துறந்து,
உயிர் துறந்து,
மனசும் துறந்தாயிற்று.
இன்னமும் துறத்தலுக்கான நீட்சி மறையவில்லை….
கவிதை நல்லாருக்கு.. ஆனா லே அவிட்ல டார்க் புளூ கலர் படிக்க கண் வலிக்குது..
>>>>இன்னமும் துறத்தலுக்கான நீட்சி மறையவில்லை….
கலக்கல்