அருவருப்பானவளின் “குறிப்பு”

 பிறெளவ்பி (மட்டக்களப்பு)     

மின்வெட்டுடன் கூடிய அடர்ந்த
இருட்டில் இருந்து எழுதுகிறேன்.
நான் உனக்கு ‘அருவருப்பானவள்’;
என்றான பின்பு…
அழவில்லை,
மன வேதனையின் ஆழத்தில் உள்ளேன்.
முன்பொரு முறை ‘சனியன்’ என்றும் மொழிந்தாய் !
அப்படிக்கு கெட்டவளா – வியப்பதுமுண்டு.
இது ஜனவரி 2011.
கடும் மழை நேரம்.

கணவன் அருகில் இல்லாத
கற்பிணியின் கனவு – எங்ஙனம்
கதறும் என அறிந்திருந்தால் அங்ஙனம்
பகிடிக்கேனும் குறிப்பிட்டிருக்க மாட்டாய்!
உன்னை  எண்ணும் போது – உன் வன்மை வழிந்த
வார்த்தைகளே முன்வந்து முட்டி மோதுகின்றன.
உன்னால் ஏற்படுகின்ற மன வடுக்களை
பகிர்ந்து கொள்ள – ஏற்று
புரிகின்ற மனமும் உனதண்டை இல்லை.
இருந்தும்…
இயற்கை என்னை விரைவில்
அணைத்துக் கொள்ளும் வரை – எனதான
விடுதலைப் பயணம் எழுத்துக்களிலேனும்
உயிர் வாழும்

1 Comment on “அருவருப்பானவளின் “குறிப்பு””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *