டீகிரி

பிறெளவ்பி (மட்டக்களப்பு இலங்கை)

பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் எடுத்து விட்டால் பட்டதாரிகளாம்
நான்கு வருடங்களுக்கு மேலாய் எதைப் படித்தமோ….
கற்ற கல்வியை விட – மற்ற
மனிதர்களைப் படிக்க கற்றுக் கொண்டோம்.
இருந்தும் இன்னும் ..
அடிக்கடி அர்த்தம் மாறும் மாந்தர்களின்
அர்த்தமற்ற போக்குகளினால்
ஏட்டுத் கல்வியை விட – வாழ்வியலின்
சமூகப் பாடத்தில் கலாநிதியாது
கனவாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *