பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் நாள்-

International Day for the Eliminating Violence Against Women

StopDomesticViolence2 பெண்கள் இப்போது கல்வி, வேலைவாய்ப்பு அரசியல் தலைவர்கள் போன்றவற்றிலும் இன்னும்  பல துறைகளில் முன்னேறியுள்ளார்கள் அப்படியானால் பெண்ணியம் பற்றிய கருத்தாடல்கள் தேவைதானா என்ற கேள்வி பலரிடம் காணப்படுகிறது எமது சமூகத்தில்  கொடிய வன்முறையாக சீதனம் உள்ளது இவ் சீதனமுறை

பெண்களை இன்று வரை எப்படி பெண்கள் மேல்  வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பதை இவ்வீடியோக் காட்சி காண்பிக்கிறது. பங்களாதேசில் சீதனத்திற்காக  பெண்களை வன்முறைக்குட்படுத்துவதையும் அப்பெண்களின் முகத்தில் அசிட் ஊத்துவது, அவர்களை தாக்குவது அடித்து சித்திரவதை செய்வது,   கொலை செய்வது போன்ற வன்முறைகள்  தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன

 


1 Comment on “பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் நாள்-”

  1. ஊடறு என்ற இணையத்தளத்தை நடத்துபவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அண்மையில் எனது பட்டப்படிப்புக்கு தேவையான ஆய்வுகளை மேற்கொளண்டுள்ளேன் அதனால் சில கவிதை எழுதும் பெண்களை தேடி பார்த்தேன் கடைக்கவில்லை எனது நண்பரை டில்லியில் தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு கேட்டுடேன் அப்போது அவர் ஊடறுவின் இணையத்தள முகவரியை தந்தார் அதில் உள்ள கவிஞர்களின் பட்டியலைப் பார்த்தததும் உண்மையில் எனக்கு ஆச்சரியம் தான் ஏற்பட்டது. கட்டுரைகள் கவிதைகள் ஓவியம் என ஊடறு புதிது புதிதாக படைப்புக்களை பிரசுரிக்கின்றது. அதுவம் பெண்கள் இப்படி நடத்துவது பெருமைக்குரியது. உங்கள் பணி தொடரட்டும் நன்றி

    ப்ரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *