ஆரியவதிகளும் ஆணிகளும்

சந்திரலேகா கிங்ஸ்லி (மலையகம்)

மனித வர்க்கத்தின் பரிணாமத்தில்
உழைப்பின் கடைசி சொட்டு இரத்தமும்
விலையாக்கப்படவே
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்

எல்லாருக்கும் போல அவளுக்கும்
பிளேன்னில் போய் வர ஆசைவீடு கட்ட ஆசை
மினுக்கு சட்டை போட ஆசை
வித விதமாய் தோடுகள் மாட்ட ஆசை
கிலிட் வைத்த கைப்பை மாட்ட ஆசை
குதிக்கால் செருப்போடு உலா வர ஆசை
குளிர்சாதனப் பெட்டிக்கு ஆசை
துணி துவைக்க இயந்திரம் வாங்க ஆசை
பண்ட பாத்திரங்கள் ஆசை
அரைக்கும் மெசின் வாங்கப் பேராசை
குடிக்காரப் புருசன்களுக்கு
கலர்கலராய் காற்சட்டை வாங்கிக்கொடுக்க ஆசை
சோம்பேறி  கணவன்களுக்கு
வயிறுமுட்ட தீனிப்போட ஆசை
பெற்றப்பிள்ளைகளும் விரும்பியதை
சாப்பிட்டுபார்க்க ஆசை
சீ டி யில் சத்தமாய் பாட்டு கேட்க ஆசை
பெரிய டீ வீ யாரும் பார்க்காமலே போட்டுக்கிடக்க ஆசை
கிராமத்திலும் தோட்டத்திலும்
வெளிநாடு போனவங்க என்று பெயர்வாங்க ஆசை

ஆகவே
ஆரிய வதிகள்
வெளிநாடு செல்ல வேண்டும்
உடல்
பூராவும் சூடுபட வேண்டும்
துடைப்பத்தால் அடிப்பட வேண்டும்
கக்கூஸ் கழுவி நாற வேண்டும்
காமப்பிசாசுகள் பீய்த்துச்சாப்பிட வேண்டும்
அராபியர்களின் ஏழு அங்குல…காயப்பட்டும்
வீட்டுச சின்னப்பிள்ளைகள் முகத்தில் காரித்துப்பியும்
எஜமாட்டி கேவலமாய் கூப்பிட
வீட்டிற்கு வந்த விருந்தாளிகள்
சிரிலங்காப்பணிப்பெண் என்று
விடுமுறைக்காய் அழைத்துச்செல்வர்
இன்னொருவன் கூத்தடிக்கும் சாமங்களில்
இவள் கண் விழித்தே இருக்க வேண்டும்
எல்லா எச்சிலையும் அள்ளிக் கொட்ட வேண்டும்
உயிரின் கடைசி சொட்டு
இரத்தம் தீர்ந்து விடும்முன்
நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவாகள்

ஆரியவதிகளுக்கு ஆணி-யடிப்பது என்பது
ஏசு நாதருக்கு ஆணி அடித்தது போல்
அத்தனையொன்றும் பிரசித்தமானதல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *