நான்-வெட்டப்பட்ட மரம்

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு)

நான் இறந்து விட்டேன் …!
மரணப் படுக்கையில் மல்லாந்து
படுத்தபடியே
என்னுள் நிழல் பெற்ற எவரும்
இன்று எனக்காய் கண்ணீர் விடஇல்லை
என் உயிரை இரக்கமற்றுப்பறித்தவரும் அவரே
என் முதுகில் அமர்ந்து
சல்லாபம் செய்த எவரும்
என் உடலைச் சுமந்து செல்ல
முன் வரவில்லை
நான் கொடுத்த அனைத்தையும்
பெற்றுவிட்டு -இறுதியில்
என் உயிரும் பெறப்பட்டு விட்டது
என் உடலின் பாகங்கள்
முழுவதுமாய் களவாடப்பட்டு விட்டன
என் ஆயுள் காலம் முடியும் முன்பே
அநியாயமாய் இலக்கப்பட்டேன்
என்னுடன் சேர்த்து எனது
சூழலும் நஞ்சாக்கப்படுகிறது
இருந்தும்-இறந்தும்
நான் இன்னும் பலவாய் வாழ்கிறேன்
என் நிழல் பெற்றவர்கள்…?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *