04.11.2006 அன்று நடந்த…
பெண்கள் சந்திப்பு -ஒரு குறிப்பு
பெண்கள் சந்திப்பின் 25 வது தொடர் நவம்பர் 4ம் திகதி ஜேர்மனியிலுள்ள ஸ்டுட்கார்ட் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இச் சந்திப்பில் ஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் லண்டன், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். குறிப்பாக ||சூரியா பெண்கள் அமைப்பை சேர்ந்த விஜயலக்சுமி, குரவரசந pநயஉந அமைப்பைச் சேர்ந்த பத்மிலி லியனகே ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அத்துடன் ஜேர்மன் மொழி பேசும் பெண்களும் கலந்து கொண்டமையால் நிகழ்ச்சிகள் யாவும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டன. மொழி பெயர்ப்பை ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மாதுமை ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்திருந்தனர். நிகழ்ச்சிகளுக்கு மங்கை, தேவா, மேரி, மல்லிகா, ராஜினி ஆகியோர் தலைமை வகித்தனர். ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
சந்திப்பை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மங்கை 25 வது பெண்கள் சந்திப்பை தொடங்கிய நாட்டிலேயே நடத்துவதையிட்டு தாம் பெரும் மகிழ்சியடைகின்றோம் என்றும் இச் சந்திப்பில் தமிழ், சிங்கள, ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள் எனவும் குறிப:பிட்டார். அதேநேரம் ஒரு முஸ்லிம் பெண் இங்கு இல்லாதது கவலையைத் தருகிறது என்றும் கூறிய அவர் அடுத்த சந்திப்புகளில் இதை நாம் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும் என்றும் கூறி நிகழ்ச்சிகளை சுய அறிமுகத்துடன் ஆரம்பித்து வைத்தார்.
முதலாவது நிகழ்ச்சியாக இதுவரை நடைபெற்ற 24 பெண்கள் சந்திப்பின் நிகழ்வுகளை உமா புரொஜக்டர் மூலம் காட்டி விளக்கினார். பெண்கள் சந்திப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்றும், சந்திப்பின் வளர்ச்சி பற்றியும் அதில் கலந்து கொண்டவர்கள் பற்றியும் கூறியதோடு மட்டுமல்லாமல் இச் சந்திப்பை ஆரம்பிப்பதற்கு எந்த ஆண்களின் உதவியோ அல்லது ஆலோசனையோ பெறப்படவில்லையென்றும் முழுக்க முழுக்க பெண்களால் சுயாதீனமாக இப் பெண்கள் சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது என்றும் கூறினார். பெண்கள் சந்திப்புகளில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் பற்றியும,; பெண்ணியம், தலித்தியம் மட்டுமன்றி போர், போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனையிழந்த பெண்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்கள் சிறுமிகள் மேல் பிரயோகிக்கப்பட்டுவரும் பாலியல் வன்முறைகள், சுனாமி போன்ற பல பிரச்சினைகளை இதுவரை நடைபெற்ற 24 பெண்கள் சந்திப்புகளிலும் -விவாதங்களுக்குட்படுத்தி- நாம் கலந்துரையாடியிருக்கின்றோம். பெண்களின் மேல் பிரயோகிக்கப்பட்ட அனைத்து வன்முறைகளுக்கெதிராகவும் பலத்த கண்டனங்களை தெரிவித்தது மட்டுமல்லாமல், அவற்றுக்கு எதிரான பல தீர்மானங்களையும் கண்டனங்களையும் கூட நாம் உரிய நேரத்தில் பல தலைவர்களுக்கும் பெண்கள் அமைப்பினருக்கும் ஏன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். தொடர்ந்தும் எமது வேலைதிட்டங்களை நாம் முன்னெடுத்து செய்து வருகின்றோம்.
15 வருடங்களுக்கு முன் நாம் கதைத்தவற்றை தற்பொழுதும் வேறு கோணங்களில் நாம் கதைக்கின்றோம் என்றும் , பல பெண் எழுத்தாளர்கள் பெண்கள் சந்திப்பினால் அழைக்கப்பட்டு சந்திப்பில் கலந்து கொண்டமை பற்றியும் விளக்கியதோடு 9 பெண்கள் சந்திப்பு மலர்களையும் எமது சொந்த செலவில் வெளியிட்டு வருகின்றோம் எனக் கூறி 9 மலர்களின் அட்டைப்படங்களையும் காட்டினார். பெண்கள் சந்திப்பு நிகழ்வுகளை தன்னால் முழுமையாக தொகுக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்கேனும் தொகுத்திருப்பதாக உமா கூறினார். இந் நிகழ்வு முடிந்தவுடன் கருத்துக்கூறிய பெண்கள், பெண்கள் சந்திப்பின் வளர்ச்சி உண்மையிலேயே ஆரோக்கியமாக உள்ளது என்றும் கணிசமான பெண்களை உள்வாங்குவதன் மூலம் பலரை எழுதுவதற்கும், துணிந்து நின்று கருத்துச் சொல்வதற்கும் இச் சந்திப்பு பக்கபலமாக அமைந்திருப்பது அதன் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் கருத்துக் கூறப்பட்டது.
அதைத் தொடர்ந்து மட்டக்களப்பு சூரியா பெண்கள் அமைப்பைச் சேர்ந்த விஜயலக்சுமி யுத்தத்தில் பெண்கள், சிறுமிகளின் நிலை பற்றி பேசினார்.
இன்று இலங்கையில் தொடரும் இந்த யுத்த சூழல் இருவகையான பாதிப்புக்களை ஏற்படுத்திக்கொண்;டுள்ளது.
1 நேரடியான பாதிப்புக்கள்
- மறைமுக பாதிப்புக்கள்
நேரடியான பாதிப்புக்களாக கைதுகள், காணாமல் போதல், ஆட்கடத்தல், சுற்றிவளைப்புக்கள், இடம்பெயர்வுகள், ஆயுதப்பிரயோகங்கள், பாலியல் வல்லுறவுகள், உயிர்இழப்புக்கள் போன்றன இடம்பெற, இதனால் ஏற்படும் மறைமுகமான பாதிப்புக்களோ உடனடியாக புலப்படமுடியாததாயும் நீண்டகாலம் பல தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியதாயும் உள்ளது. இது இலங்கையின் ஒட்டுமொத்த சமூகத்தையுமே பாதிக்கின்றது. யுத்தத்தின் நேரடிப்பாதிப்புக்களுக்கு அதிகம் இன்று முகம் கொடுப்ப்து கிராமப்;புறங்களும் எல்லைக் கிராமங்களும் ஆகும். யுத்த சூழலில் அதிகப்படியான சுற்றி வளைப்புக்கள், கைதுகள், ஆட்கடத்தல்கள், படைக்கு ஆட்சேர்த்தல் என்பன மனிதாபிமானமற்ற முறையில் மிகவும் இலகுவாக இப் பிரதேசங்களில் இடம் பெறுகின்றன.
இச் சந்தர்ப்பங்களில் குடும்பங்களில் உள்ள ஆண்கள் களையப்பட பெண்களும் சிறுவர் சிறுமிகளும் அனாதைகளாக்கப்படுகின்றனர். அன்றிலிருந்து அவர்களது சமூக, பொருளாதார கல்வி நிலை ஆட்டம் காணத் தொடங்குகின்றது. இல்லாமல் போனவரை தேடுவதும், குடும்பத்திற்கான வருமானத்தை தேடுவதும், சமூகப்பாதுகாப்பை தேடுவதும் என பல சுமைகளை பெண்;கள் சுமக்க வேண்டியுள்ளது. மற்றும் கைது செய்யப்படல், காணாமற் போதல், கடத்தப்;படல், ஆட்சேர்த்தல் ஆகியன இன்று வடகிழக்கில் அதிகம் இடம்பெற்று வருவதால் பெற்றோர் தம் பிள்ளைகளைக் காப்பாற்ற சிறுவர் சிறுமிகளை சமூகத்தின் பார்வைக்கு பெரியவர்களாக்க குடும்பத்தலைவர்களாக்க முயல்கின்றனர். இதனால் இளவயது திருமணங்களுக்கு பல சிறுமியரின் வாழ்க்கையும் கல்வியும் பலியாகின்றது. இதனால் இல்ல வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன் கர்ப்பிணிக் குழந்தைத் தாய்மார் இறப்பு வீதமும் அதிகரிக்கின்றது. பெண்கள் கணவனால் கைவிடப்படல், தற்கொலை, தற்கொலை முயற்சியில் ஈடுபடல், குழந்தைகளைக் கைவிட்டு மத்திய கிழக்கிற்கு செல்லல், கட்டாயக் கருக்கலைப்பில் ஈடுபடல், ஈடுபடுத்தப்படல் போன்ற துயரங்களை இந்த யுத்தத்தால் பெண்கள், சிறுமிகள் எதிர்கொள்கின்றனர்.
முக்கியமாக பெண்களின் சுயாதீனமான வாழ்க்கையை இல்லாதொழிக்கும் ஒரு கருவியாகவே இந்த யுத்தம் உள்ளது. சிறுமியர் நிலைகளை மேலும் நோக்கின் குடும்பத்தில் பெற்றோரை இழந்த சிறுமியர் குடும்பத்தின் சுமைகளை சுமக்க வேண்டியவராகின்றனர். இதனால் பெரும்பான்;மையான பெண் சிறுமியரின் கல்வி நிலை பாதிக்கப்படுகின்றது. இச் சிறுமியர் தனக்கு கீழ் உள்ள தம்பி தங்கையரை பராமரிக்க வேண்டியுள்ளதால் இடைநடுவில் கல்வியை இழக்கின்றனர். வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பிரச்சினைகள் அரசியல் நோக்கில் அணுகப்படுவதால் ஆண்களது இயல்பான சவால் அணுகுமுறை பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக வலுப்படுத்துவதாகவும், விரிவுபடுத்துவதாகவும் காணப்படுகிறது. பொருளாதார நிலையில் நின்று பார்ப்பின் யதார்த்தத்தின் பயங்கரத்தை புரிந்துகொள்ள முடியும். அதுவும் பெண்நிலை நோக்கிலான பொருளாதார அணுகுமுறை முக்கியம். பெண்கள் யுத்தத்திற்கான பிள்ளைகள் பெறும் வெறும் இயந்திரமாகவே கருதப்படுகின்றனர். கொல்லப்பட்டவர்களின் இடைவெளிகளை நிரப்பி கொடுக்கும் கடமையைப் புரிவதே பெண்ணின் கருப்பை என்ற தோற்றப்பாடு உருவாகிவிட்டது. பெண்களின் முக்கிய உணர்வுபூர்வமான பிரச்சனைகள் முக்கியத்தை இழந்துவிட்டது. இவ்வாறாக விஜயலக்சுமி தனது கருத்துக்களை முன்வைத்தார்
அடுத்த நிகழ்வாக பத்மிலி லியனகே இனவொற்றுமையுடன் „சமாதானம் நோக்கி ஒரு அனுபவப் பகிர்வு” என்ற தலையங்கத்தின் கீழ் பேசும்போது நாங்கள் பல தமிழர்களுடனும் சிங்களவருடனும் முஸ்லிம்களுடனும் வேலை செய்கின்றோம். சமாதானத்திற்காக நாம் போராடுகின்றோம். இலங்கையில் இனவாதம் தலைதூக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக புத்தபிக்குகளும், ஜேவிபியும் தான் உள்ளனர். நாம் சமாதனத்தை நோக்கி வேலைசெய்வதால் எமக்கே பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. இன்று விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்க என்ன காரணம் என்பதை முதலில் நாம் ஆராய வேண்டும். அவர்கள் ஏன் “பயங்கரவாதிகள்” ஆனார்கள், இனப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை பார்க்காமல் இராணுவ ரீதியில் நாம் சமாதானத்தை வென்றெடுக்க முடியாது. எல்லாவிதமான பயங்கரவாதத்தையும் (யுடட மiனெ ழக வநசசழசளைஅ) நான் வெறுக்கின்றேன்.
இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் இன ஒற்றுமையுடன் வாழவேண்டும். அதற்கு இலங்கை அரசியல் இடம் கொடுக்குமா என்பது சந்தேகம் தான். 1998ம் ஆண்டு ஆபிரிக்காவை எடுத்துக் கொண்டால் அங்கு தமது தேசத்தை பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் பெண்கள் போராட்டத்தில் குதித்தார்கள். பெண்கள் ஒன்றுபட்டால் நாம் நிச்சயம் வெற்றி பெறலாம். அதற்கு பல உதாரணங்களை நாம் காட்டலாம். வட அயர்லாந்தில் நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த காலத்தில் பெண்கள் ஒன்றுபட்டு எமது பிள்ளைகளை நாங்கள் இராணுவத்திற்கோ அல்லது மற்றைய போர் புரியும் அமைப்புகளுக்கோ அனுப்ப மாட்டோம் என வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்களின் போராட்டம் வெற்றி பெற்றது. இலங்கையிலும் இப்படியான நிகழ்வுகள் ஏற்பட்டால் ஒழிய இன அழிவுக்கான இப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. இலங்கையில் இரண்டு மொழியே அரசகரும மொழியாக உள்ளது. ஆனால் நாம் அவற்றை கற்க முயலவில்லை. தமிழர்கள் சிங்கள மொழியையும் சிங்களவர்கள் தமிழ் மொழியையும் கற்றால் அவர்களுக்கான அடிப்படை பிரச்சினையை தாங்களே பேசி தீர்க்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் எனவும் சுட்டிக் காட்டினார். இன்று தென்னிலங்கையில் இனவாதமே முன்னிற்கின்றது. சாதாரண மக்களின் வாழ்வியல் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அடுத்த நிகழ்வாக பெண் படைப்புகள் சில பற்றிய அறிமுகத்தை நான் செய்திருந்தேன். ஆழியாளின் “துவிதம்”, பெண்ணியாவின் “என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்புவை”, விஜயலக்சுமியின் “வானம் ஏன் மேலே போனது”, செல்வியின் “Stories from Tamil Women writing“ ஆகியன அறிமுகம் செய்யப்பட்டன.
முதலில் துவிதம் அறிமுகம் செய்யப்பட்ட போது ஆழியாளின் கவிதைகள் உரத்துப்பேச என்ற கவிதைத் தொகுதியில் வெளிவந்ததைவிட இத் தொகுப்பில் புலப்பெயர்வுகளை உள்ளடக்கிய கவிதைகளே வெளிவந்துள்ளதாகவும் வித்தியாசமான கவிதைகளை ஆழியாள் எழுதுவதாகவும் அந்தவகையில் அவரின் இரண்டாவது கவிதைத் தொகுதியாக துவிதம் வெளிவந்துள்ளது என்றும் அவரின் கவிதைகள் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆழியாளின் துவிதம் நூலை மங்கையும் விஜயலக்சுமியும் வெளியிட்டு வைத்தார்கள்.
அடுத்து பெண்ணியாவின் கவிதைத் தொகுதியான „என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை“ என்ற கவிதை நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
பெண்ணியா தனது 16வது வயதில் கவிதை எழுதத் தொடங்கியவர் (அவரது சொந்தப் பெயர் நஜிபா) இவரது கவிதைகள் முதன்முதலில் சரிநிகரில் வெளியானது. அத்துடன் சூரியா பெண்கள் அமைப்பினரால் வெளியிடப்பட்ட உயிர்வெளி கவிதைப் புத்தகத்திலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளது. 10 வருடங்களுக்குப் பின்னர் பெண்ணியாவின் கவிதைகளை „ஊடறு“ மூலமாக தொகுத்து வெளியிட்டிருக்கின்றோம் எனவும் கூறிய நான் இவ் அறிமுகத்தை தொடர்ந்து அவரது நூலை ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் மல்லிகாவும் வெயிட்டார்கள்.
அதைத் தொடர்ந்து சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் மட்டக்களப்பு, பெண்ணிய இதழ் வெளியீட்டாளர் பனிக்குடம் பதிப்பகம் ஆகியவையின் வெளியீடான விஜயலக்சுமியின் „வானம் ஏன் மேலே போனது“ சிறுகதைத் தொகுதி அறிமுகம் செய்யப்பட்டது. விஜயலக்சுமியின் சிறுகதைகள் பல பெண் சஞ்சிகையிலும் ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர் ஆகியவற்றிலும் வெளிவந்துள்ளது. அவரது வலி என்ற கதையும் நியாயம் என்ற கதையும் என்னை மிகவும் பாதித்தவை. இச் சிறுகதைத் தொகுதியை தேவாவும் மேரியும் வெளியிட்டு வைத்தார்கள். அடுத்ததாக 7 வருடங்களுக்கு முன் -சக்தி வெளியீடாக- தொகுக்கப்பட்ட „புது உலகம் எமை நோக்கி“ என்ற சிறுகதைத் தொகுதியில் வெளிவந்த பல சிறுகதைகள் உள்ளீடாக ஆங்கிலத்தில் விமர்சிக்கப்பட்டுள்ள ளுவழசநைள கசழஅ வுயஅடை றுழஅநn றசவைiபெ என்ற நூல் எடுக்கப்பட்டது. இந் நூல் செல்வி திருச்சந்திரனால் ஆங்கிலத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளமையானது அதன் வாசகர் பரப்பை இன்னொரு தளத்துக்கு இட்டுச் சென்றுள்ளது. இப்படியான தொகுப்புக்களை பெண்கள் சந்திப்பும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன். இதைவிட நளாயினியின் கவிதை நூல்களான நங்கூரம், உயிர்த்தீ, மாதுமையின் தூரத்து கோடை இடிகள் என்பனவும் வெளிவந்துள்ளன என்றும் இப் புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் ஏற்கனவே பல சஞ்சிகைகளிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ளன என்பதைக் கூறி எனது புத்தக அறிமுக நிகழ்வு நிறைவு கண்டது.
அடுத்து „இலங்கைப் பெண்களின் எழுத்தும் தாண்டமுடியாத சிக்கல்களும்“ என்ற தலைப்பின் கீழ் விஜயலக்சுமியும,; தில்லையும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். என்னதான் பெண்கள் எழுத்துத் துறையில் இருந்தாலும் அவர்கள் எதிhநோக்கும் பிரச்சினைகள் பல. ஊடகங்கள் என்பவை பொதுவாக பெண்களை ஒடுக்குவதாயும் சமூகத்தில் நடைமுறையில் உள்ள ஆணாதிக்க பண்பாட்டை நீடிக்கவும், சுய விருப்பு வெறுப்புகளற்ற, வெறும் போகப்பொருள்களாக பெண்களின் படிமங்களை திரும்ப திரும்ப உருவாக்குவதாகவும், பெண்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றி ஊடகங்கள் அக்கறை கொள்வதில்லை என்றும், இன்று பெண்கள் மீதான வன்முறைகளை எழுத்துவடிவத்தில்கூட சொல்ல முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது என்றும் தனது கருத்துக்களை முன்வதை;தார் விஜயலக்சுமி.
தில்லை தனது கருத்தைக் கூறும்போது மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்குமிட வசதி இல்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்களை வைத்துக் காப்பாற்ற ஒரு ளயகந hழரளந அமைக்கப்பட வேண்டும் என்பது தனது நீண்ட கால ஆதங்கம் என்றும் கூறினார். இந்த வசதியீனத்தால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் சில உதாரணங்களைக் கூறினார். அதேநேரம் பெண்களை இழிவுபடுத்துவதற்கும் இப்படியான ளுயகந ர்ழரளந் துணை போகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்பட்டது.
இறுதி நிகழ்வாக பரிமளா பேசுகையில், பெண்சிசுக் கொலை இன்று இந்தியாவில் மிக அதிகமாக நடைபெற்று வருகிறது. ஒரு பெண் பிறக்கும் உரிமையை மதம், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை மறைமுகமாக நசுக்குகின்றன என்றார். திருமணச் சடங்குகளில் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்கள், வரதட்சணை ஆகியவை நூற்றுக்கு நூறு வீதம் திருமண வியாபாரமாக்கபட்டுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு கருவையும,; பிறந்த சிசுவையும் அழிக்க ஆரம்பித்தார்கள். அதாவது பெண்களை அழிக்க ஆரம்பித்தார்கள். ளுஉயnநெச மூலம் கருவிலேயே என்ன பிள்ளை எனக் கண்டறியும் முறை இந்தியா பாகிஸ்தான் ஆகிய இடங்களில் சட்டப்படி மறுக்கப்பட்டாலும், கிராமங்களில் இயற்கை வைத்திய முறைப்படி கள்ளிப்பால், நெல், புகையிலை நீர் என்பன மூலமாக பிறந்த பெண் குழந்தைகளின் உயிர்களை வலுக்கட்டாயமாக கொன்று குவிக்கின்றார்கள். மதங்களோ உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற மதப்பிரச்சாரத்தை மேற்கொண்டாலும் மூட நம்பிக்கைகளினாலும் மத நம்பிக்கைகளினாலும் சமூக உத்தரவாதமற்ற நிலையில் அவர்களின் அச்ச உணர்வு நீக்கப்படாத நிலையில் பெண் சிசுக் கொலை இன்று இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றது என்று தனது கருத்தை முன்வைத்தார்.
அடுத்ததாக பெண்கள் சந்திப்பு மலர்க் குழு தெரிவு செய்யப்பட்டதுடன் அடுத்த பெண்கள் சந்திப்பை பிரான்சில் நடத்துவதாகவும் முடிவு செய்யப்பட்டது. இறுதியாக மேரி நன்றியுரை வழங்கினார்.
ஒவ்வொரு நிகச்சிகளின் முடிவிலும் விவாதங்கள், கருத்துப்பரிமாறல்கள் நடத்தப்பட்டன. இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து வகுப்பு, பிரளயம், பிஞ்சு மனம் ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.