27.04.2025 இன்று நடைபெற்ற கோடியோரக் கூடல் சமூகத்தின் பல்வேறு பக்கங்களையும் துழாவி பார்த்து மனித வாழ்வின் மகத்துவத்தை உணர்வதற்கு முயன்றது. அதற்கு ச. கலையரசி யின் “இருத்தல்” நாடகம் ஊற்றுக்கண்ணாய் இருந்தது. இது கலையரசி எழுதிய, நெறியாள்கை செய்த முதல் நாடகம்.
அதில் பிரதான கதாபாத்திரத்தையும் அவரே தாங்கி நடித்திருந்தார். மேலும் 10 வயது சிறுமியான அஹனாசிறியையும் நடிக்க வைத்திருந்தார். இத்தனையையும் ஒட்டுமொத்தமாக அவரே நேர்த்தியாய் செய்திருந்தது பாராட்டுக்குரியது. அவரின் இந்த வளர்ச்சி எங்கள் குழுவை பெருமையடைய செய்கிறது. வேதனைகளையும் சோதனைகளையும் கடந்து கலையரசி அவரின் பெயருக்கேற்றாற் போல் எதிர்காலத்தில் இவ்வுலகில் மிளிர வாழ்த்துகிறோம்.
Thanks Selvaraj Leela – https://www.facebook.com/selvaraj.leela




