பண்பாடும் பெண்களும்

சந்திரலேகா கிங்ஸ்லி –மலையகம் இலங்கை.

art

வரலாறுகள் படைப்பதென்பது இருப்பவைகளை சுமப்பது அல்ல உடைப்பை ஏற்படுத்தி புதிய பண்பாட்டை புகுத்தி அவற்றை நிதானமாக கைய்யாண்டும் இன்னோர் பரம்பரைக்கு கையளித்தும் பயணிப்பதாகும்.உயர் பதவிகளிலும் அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் கொள்கை வகுத்தலிலும் பங்கு கொள்ளும் பெண்கள்

பண்பாடென்பது குறிப்பிட்ட தொகுதியோர் ஒன்றாக பின்பற்றும் பழக்க வழக்கம்  வழக்காறுகள் சம்பிரதாயங்கள் என்பவற்றினை ஒன்றாக கொண்ட தொகுதியாகவே காணப்படுகின்றது.இப்பண்பாடு தனியாளின் மூலமோ சமூக நிகழ்வுகள் தனியாள் நிகழ்வுகளின் மூலமோ காலம் காலமாக காத்து சுமந்து வளர்த்தப் பெருமையில் பெண்களுக்கு பாரிய பங்குண்டெனலாம்.

ஒரு சமூகத்தில் ஆண்களைவிட பெண்களே பண்பாட்டுக் கூறுகளை ‘தலையில் சுமந்து செல்லும்’ மிகப் பெரிய பணியை செய்து கொண்டுள்ளனர்.பண்பாட்டின் கூறுகள் நன்மை கொன்டனவாக இருப்புக்களை அடையாளப்படுத்துவனவாக காணப்பட்ட பொழுதிலும் அவை அறிவியல் சிந்தனைகளை கருத்துக்களை அர்த்தப்படுத்தும் தோரனையில் எத்தகை வலிமை கொண்டவைகள் என்பதை சிந்தித்தல் மிக அவசியமானதாகும்.
                 சற்றே நிதானமானது சிந்திப்பதற்குரியதாகிற. பண்பாட்டைமிக  நுணுக்கமாக(?)பின்பற்றும் பெண்கள் அதன் ஒவ்வொரு கூறுகளையும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் தான் சார்ந்த குறுகிய நிலையிலேயே பிரயோகிப்பதனை நாம் அவதானிக்க முடிகின்றது. தனக்கேயரித்தான அவற்றை குடும்பத்துக்குள்ளேயும் வணக்கத் தலங்களுக்குள்ளேயும் முடக்கிப் போடுவது யதார்த்தமாகவே காணப்படுகிறது. ஆவ்வாறூக முடக்கி வைக்கப்பட்டிருக்கும் பண்பாடுகள் இருப்புக்கலுக்கு செய்யும் பங்களிப்பு எத்தகையது என்பதையும் மனங்கொள்ள வேண்டும்.

art

 குடும்பத்துக்குள் முடக்கி ஆளப்படும் பண்பாடுகளை பொதுவாழ்வுகுள்ளும் பரவச் செய்வது சமூகத்தின்கூறாகிய பெண்களின் மிகப்பெரிய பணியாகும். கலை இலக்கிய படைப்பிலக்கியம் அரசியல் சமூகம் பொருளாதார சிந்தனைகளின் மாற்றத்துக்கு இப்பண்பாடுகளின் மாற்று பண்பாடுகளையும் புகுத்துதல் அவசியமாகிறது.மாற்று பண்பாட்டை புகுத்துதல் மூலம் புதிய பண்பாட்டு கோலத்தையும் வளமான மாற்று பண்பாட்டையும் சமூகத்தில் பிரயோகிக்க முடியும்;. பெண்கள் மத்தியில் பண்பாடுகளை மையமாகக் கொண்ட  அதிகாரப்பண்பு பரவலாகக் காணப்படுவது கண்கூடு. குடும்பச்சூழல் கணவன் பிள்ளைகள் குடும்ப அங்கத்தவர்கள் மீது தம்மாலான உச்ச பண்பாட்டு அதிகாரத்தை திணிப்பதுவும் அதிகாரத்தினை பெற்று கொள்ளும் நோக்கில் செலுத்தப்படும்ஃபின்பற்றும் பண்பாடுகளும் அதிகம் உள்ளது.மேலும் தம் அதிகாரத்தினை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் இந்தப்பண்பாட்டை பிரயோகப்படுத்துவதும் உண்டு. தனிக் குடும்ப வாழ்வும் சமூக முன்னேற்றதிதிற்காகவும் கூறுகளை விதைப்பதாக எண்ணி கூட்டுக்குடும்ப வாழ்வு அன்பு பாசம் கூட்டுழைப்பு கூட்டுத் தீர்மானம் என்பவற்றை இப்பண்பாடு சார்ந்த அதிகார தன்மை அள்ளிச் சென்று விடுகிறது.

 மேலும் பண்பாட்டை ஊடு கடத்தும் பெரும் ஊடகமாகவே பெண்கள் காணப்படுகின்றனர். பெண்கள்-தாய் மனைவி  மூத்தோர் மூலமாகவே பண்பாடுகள் பெரும்பாலும் இன்னோர் பரம்பரைக்கு கடத்தப்படுகிறது.ஒரு சந்ததியிலிருந்து இன்னோர் சந்ததிக்கு பண்பாட்டை ஊடுகடத்தும் பணியை செய்யும் பெண்கள் அறிவியல் ரீதியாக அவற்றை கடத்துவது மிகவும் அவசியமான பணியாகிறது.பண்பாட்டை பரம்பரைபரம்பரையாகதூக்கிச்செல்லும் பாரிய பணியைய்ச் செய்யும் பெண்கள் இணியாவதுபாட்டி முப்பாட்டி பூட்டி அம்மாவிடம் இருந்து பலக்கப்பட்ட பழக்கங்கள் சம்பிரதாயங்கள் வரையரைகள் ஆசாரங்கள் என்பவற்றை கடத்தும் கட்டாய நோக்குடன் செய்யாத அறிவியல் கண் கொண்டு அவற்றை நோக்குவதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதுவும் காலத்தின் தேவையாகும்.
சுதந்திரம் என்றும் விடுதலை என்றும் வாய் கிழிய கதறி அவை கிடைத்துவிடப் போவதில்லை உபை;புகதை;தகர்த்தெறிய தைரியம் கொண்டுல்ல பெண்ணாலே தான் சதந்திர காற்றையும் விடுதலை கீதத்தையும் துணிவாக சுவாசித்து மகிழ முடியும்.
பண்பாடுகளை கடத்தியே ஆகவேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு செய்யாது விடுவது தெய்வக் குற்றமாகவும் சிந்திக்கும் மன நிலைகளை மாற்றியமைக்க வேண்டும். ஊடுகடத்தும் கருவியாக செயற்படும் பெண்கள் பண்பாட்டை சரியாக புரிந்து மிக நுணுக்கமாக அப்பணியை செய்தல் அவசியமாகும்.

இவ்வாறான பண்பாடுகள் கடத்தப்படுவது என்பது எவ்விதமான நோக்கங்களையும் உள்ளீர்க்காது வெறுமனே கடத்தப்படுவது அர்த்த புஸ்டியில்லாத செயலாகும். பெண்ணின் எண்ணக்கருத்தையும் ஆளுமையை நோக்கமில்லாத இச்செயற்பாடு சிதைப்பதாக அமைந்து விடும் இவை காத்திரமாக பரப்பப்படுவதற்கும் சிந்திக்கப்படுவதற்கும்  நோக்கங்களை வரையறுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.செய்யப்படும் செயல்கள் நோக்கத்தினை தெளிவாக கொண்டிருக்கும் பொழுது தான் செயற்றிறன் வலிமை கொண்டதாக மதிப்பபீடு செய்யப்படும். எனவே பண்பாட்டை நோக்கத்தடன் பரப்பச் செய்வதே பெண்ணக்குரிய காத்திரமான பணியாகும்.

         பொதுவாகவே ‘சாதியம்’ தூக்கிப்பிடிக்கும் பணியை முனைப்பாக செயற்படுவது பெண்களே. சடங்கு நிகழ்வுகள் திருமணம் விழாக்களில் கலந்து கொள்ளும் பொழுதும் ‘சாதியம்’ கலந்தே சகல விடயங்களையும் நோக்குவது பெருமையானப் பணியாக கொள்வதும் பெண்களின் அறிவீனத்தையே சுட்டிக் காட்டுகிறது. அவ்வாறான சாதியத்தினை ஒத்தப் பண்பாட்டை கட்டியெழுப்புவது கூட அறிவியல சிந்தனையற்ற செயல்பாடாகும்;  . எனவே மாற்று பண்பாட்டையும் மாற்று சிந்தனையையும் விதைக்கப் புறப்படும் பெண்கள் புதிய பண்பாட்டை  விதைப்பதிலும் அறிவார்த்தமாக செயற்படுபவர்களாயின் பெண் விடுதலையென்பது பயனுறுதி மிக்கதாக அமையும்

வரலாறுகள் படைப்பதென்பது இருப்பவைகளை சுமப்பது அல்ல உடைப்பை ஏற்படுத்தி புதிய பண்பாட்டை புகுத்தி அவற்றை நிதானமாக கைய்யாண்டும் இன்னோர் பரம்பரைக்கு கையளித்தும் பயணிப்பதாகும்.உயர் பதவிகளிலும் அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் கொள்கை வகுத்தலிலும் பங்கு கொள்ளும் பெண்கள் தம்மைச் சுற்றியுள்ள அரசியல் பொருளாதாரம் சமூக கலாசார பண்பாடுகளில் மாற்றப்பண்பாடுகளை விதைப்பதனூடாக சரியான பெண் விடுதலைக்காட்டும் பாதையை தரிசிக்க முடியும்  

 

5 Comments on “பண்பாடும் பெண்களும்”

  1. மிகவும் தரமான படைப்புக்களை தரும் ஊடறுவுக்கு முதலில் முதற் கண் வணக்கம் மலையகத்திலி
    ருந்து ஒரு சில படைப்புக்களையாவது ஊடறு பிரசரித்து வருவது மகிழ்ச்சியை தருகிறது அத்துடன் மலையகப் பெண்களின் கவிதைத்தொகுப்பை வெளியிட்ட ஊடறு றஞ்சிகஇகும் தேவாவுக்கும் நாம் என்றென்றைக்கும் கடமைப்பட்டுள்ளோம். புலம்பெயர்நாடுகளில்ஏம் பெண்களின் எழுத்துக்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் சுவிஸ் றஞ்சிஇ ஜேர்மன் தேவா ஆகியோருக்கு நாம் நன்றி சந்திரலேகாவின் கட்டுரை ஆழமான பார்வையை இக்கட்டரையிலஇ சொல்லி நிற்கிறது தொடர்ந்து சந்திரலோகா போன்றவர்கள் எழுத வேண்டும்.

    சிவலிங்கம்

  2. “உயர் பதவிகளிலும் அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் கொள்கை வகுத்தலிலும் பங்கு கொள்ளும் பெண்கள் தம்மைச் சுற்றியுள்ள அரசியல் பொருளாதாரம் சமூக கலாசார பண்பாடுகளில் மாற்றப்பண்பாடுகளை விதைப்பதனூடாக சரியான பெண் விடுதலைக்காட்டும் பாதையை தரிசிக்க முடியும்”

    சரியான புரிதல்களும் அதன் பதிலிடுகளுமே இன்று பெண்கள் செய்யவேண்டிய கட்டாய செயல்பாடுகள். புலம் பெயர்ந்த சுழலில் இலங்கைத் தமிழ்ப் பெண்கள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சரியான, காலத்திற்க்கேற்றப் பதிவு.

  3. அனார்கலி உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன். உண்மையில் புலம்பெயர் இலங்கைத்தமிழப்பெண்கள் இக்கட்டுரையை வாசிக்க வேண்டும் சந்திரலேகாவின் கட்டுரை அவசியமானதும் இன்றையக்கு தேவையானதும் கூட ஊடறு இது போன்ற கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் புலம்பெயர் நாட்டில் இதற்கான விவாதத்தை முன்னெடுக்க வேண்டும் அதை ஊடறுவால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது அதற்கான ஒத்துழைப்பை சந்திரலோக போன்று நாமும் வழங்க முற்படுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *