நசுங்கிக் கிடந்து நலிவுறும் நாட்கள்

பிறெளவ்பி,  (மட்டக்களப்பு இலங்கை)

(யாழினி, பிறெளவ்பிஆகிய இருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர் அவர்களின் கவிதைகள் ஊடறுவில் நன்றியுடன் பிரசுரமாகின்றது.)

******

நானிழக்கும் சுயங்களின் முகவரிகள்..

ஏனிழந்து போகின்றன என்றறிய முடியாது

திணறும் கணங்கள்..

என்ன செய்வதென்றியாது

ஏங்கும் பொழுதுகள்..

போய்க் கொண்டிருக்கிறது வாழ்வு.

தனிமையின் பலத்தில்

பின்னடைந்து போன கண்கள்

கண்ணீரை விடுவிக்கின்றன.

வாழ்வுக்கான வேர்கள் –  உன் வசமே

ஊன்றியிருக்க………

நம்பிக்கை நிரப்பி நீண்ட பொழுதுகளாய்

எந்தன் தவமிருத்தல் நீள்கிறது !

பாசம் முன் வந்து மோதி நின்றாலும்

என்னைச் செரிக்கும் – வார்த்தை வலிகளின் நிமித்தம்

சொற்கள் வர முடியாது..

மௌனம் பிசைகிறது!

இன்னும் சில நேரங்களில்

அகால மரணம் குறித்த

அதீத அச்சமொன்று எட்டிப் பார்க்கிறது!

அடயாளம் தொலைதலை

யாரிடம் சொல்லிப் பாதுகாப்பேன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *