நம்பிக்கை

மஹ்மூத் தர்வீ

உனது பாத்திரத்தில்
இன்னமும் சிறிது தேன் எஞ்சி உள்ளது
ஈக்களை துரத்து
தேனைப் பாதுகாத்திடு.
இன்னமும் கூட உனது வீட்டுக்கோர் கதவுண்டு
இன்னமும கூட உனது வீட்டிலோர் பாய் உண்டு
கதவை மூடு

குளிர் காற்றில் இருந்தும் உன்
குழந்தைகளை காப்பாற்று
மிக மிக மோசம் இக்குளிர்காற்று
குழந்தைகள் நன்கு தூங்குதல் வேண்டும்
நெருப்பெரிக்க சிறிது விறகு
கொஞ்சம் கோப்பி
நெருப்பு சுவாலை
இன்னமும் கூட உன்னிடம் உண்டு.

இந்த கவிதையை எழுதியவர் மஹ்மூத் தர்வீ

கவிதைகள் தமிழாக்கம்
எம் . ஏ . நுஃமான்
இக்கவிதை வாசித்ததும் மட்டுமல்ல இந்நூலையும் மிகவும் இரசித்திருந்தேன். உண்மையில் கவிஞரின் எழுத்தாற்றல் மிகவும் அற்புதமானது

ஊடறுவுக்கு அனுப்பித் தந்தவர் எஸ்தர்

1 Comment on “நம்பிக்கை”

  1. This poem reminds me that my one an only Father……… nice thoughts…….. thanks for your sharing.
    குளிர் காற்றில் இருந்தும் உன்
    குழந்தைகளை காப்பாற்று
    மிக மிக மோசம் இக்குளிர்காற்று
    குழந்தைகள் நன்கு தூங்குதல் வேண்டும்
    நெருப்பெரிக்க சிறிது விறகு
    கொஞ்சம் கோப்பி
    நெருப்பு சுவாலை
    இன்னமும் கூட உன்னிடம் உண்டு………
    awesome…………….

    thanks……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *