தருமபுரியில் எஸ்.ஐ ஆக பொறுப்பேற்றுக் கொண்ட இந்தியாவின் முதல் திருநங்கை: ப்ரீத்திகா யாஷினி

இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் உதவி ஆய்வாளராக ப்ரீத்திகா யாஷினி பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் உதவி ஆய்வாளருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்த பிரித்திகா யாஷினி உள்ளிட்ட 108 பேருக்கு தற்போது காவல் நிலைய பணி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. அதில், தருமபுரி மாவட்டத்தில் 15 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் பிரித்திகா யாஷினியும் ஒருவர். தருமபுரியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அவர் உதவி ஆய்வாளராக இனி பணிபுரிவார். 
This image has an empty alt attribute; its file name is prithika.jpg

‘விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி’ என்று கூறுவார்கள், அது ப்ரித்திகாவின் விஷயத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அவரின் விடாமுயற்சி, இந்தியாவின் காவல்துறையில் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் என்ற பெருமையை பெற்றுத் தந்துள்ளது. ஆனால் இதற்கு பின்னால் அவர் சந்தித்த துயரங்கள் மிக அதிகம்.

அவரின் இந்த வெற்றியும் கூட ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்றம் சென்றே பெற வேண்டியிருந்தது.

சமூகத்திற்கு அவரின் அறிவுரை

முதலில் பெற்றோர்கள் எங்களை போன்றோரை மனவுமந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். புரிதல் அவசியம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் புரிந்து கொண்டால் எங்களை போன்ற பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியேறும் அவசியம் ஏற்படாது.

“திருநங்கைகளுக்கு நான் சொல்வெதெல்லாம் எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியேற நினைக்காதீர்கள். உங்களின் போராட்டத்தை அங்கிருந்தே புரிய வைக்க வேண்டும். படிப்பு மிக அவசியம். படிப்பு தான் நமக்கு கை கொடுக்கும், நம் நிலையை உயர்த்தும்”.

என்னால் முடிந்த அளவு என் போன்றவர்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *