தலைப்பிலி கவிதை

கமலா வாசுகி – 28.12.2015 பெண்களின் தொடைகள் ஒரு பிரச்சனை மார்பகங்களோ பாரிய பிரச்சனை யோனிகள் பற்றிச் சொல்லவே தேவையில்லை அதனுள்ளிருந்து வடியும் இரத்தமோ கேவலத்திலும் கேவலம். இவற்றைப் பார்ப்பது பாவம் இவற்றைப் பற்றிப் (பெண்கள்) பேசுவதோ பெரும்பாவம் ஒளித்து மறைத்துப் …

Read More

அதிகாரக்குறி / அதி ‘காரக்’ குறி

சிமோன்தீ நீண்ட நெடுமூச்செறிந்த மௌனங்கள் தாங்கிய அந்த நிமிடங்களை எவ்வாறோ கடந்தாக வேண்டும் எப்படி? கிருஷ்ணனின் தசாவதாரத்தில் பெண்கள் பலிக்களங்களில் என எழுதி வைத்தார்கள் போலும் புராணர்கள் அவர்களின் தினவெடுத்த குறிகளின் அதிகாரத்துடன் யாரும் அக்கறைப்படாத பூக்களின் அழகியல்கள் கசக்கிப் பிழிந்து …

Read More

கவிதை 1அவள் 1,கவிதை 2 அவள் 2,கவிதை 3 அவள் 3

-யோகி ( ஜனவரி 2016) கவிதை 1அவள் 1 மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது முன்பொருமுறை  அவளோடு விளையாடி சினேகம் வளர்த்து பின் பிரிந்து வானம் சென்ற  அதே மழை.. இப்போது முட்டி மோதி ஆயிரமாயிரம் துளிகள் என அவள் மீது …

Read More

தலைப்பிலி கவிதை

விஜயலட்சுமி சேகர் இப்ப முளைச்சதுகள் றக்க கட்டி பறக்குதுகள்… பொன்னாச்சியின் முனு முனுப்பு நேரம் இல்ல எண்டாத்தான் காலம் போல… இது எனது அவதானிப்பு தூங்கி முளித்த கண்ணுடன் படுக்கையில் புரள்வேன் பகல் கனவாய்… பாதையெங்கும் பட்டு விரிக்க வேண்டும் எனும் …

Read More

மீட்டெடுக்க முடியாமற்போன விம்பம்

ஃபஹீமாஜஹான் இலக்கற்றுப் பறந்து கொண்டிருந்த சிறு பறவை விதியின் சுவரொன்றினருகே வட்டமிட்ட பொழுது யாருக்காவோ காத்திருந்த தளவாடியில் சிறகடிக்கும் தனது துரதிஷ்டத்தின் விம்பத்தைக் கண்ணுற்றது பாவனை காட்டுமந்தக் கண்ணியில் உள்ளம் சிக்கிவிட உள்ளிருக்கும் அபூர்வத்தின் ஸ்பரிசத்தைப் பெற முயன்ற தருணங்களிலெல்லாம் வலிமை …

Read More

இறவா என் தேடுதல்மட்டும்

த.ராஜ்சுகா- எனக்கான கதவுகள் மூடப்பட்டும் எதிர்பார்ப்பின் கைகள் நிறுத்தப்படவேயில்லை… முயற்சிகள் முழுமூச்சாய் பறந்தாலும் முட்டுக்கட்டைகள் அங்கங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.. கனவுகள் நீண்டுகொண்டிருப்பினும் இரவுகள் இன்னும் அப்படியேதான்…. பாதங்களில் வேகத்தை கூட்டினும் பாதைகள் பாறைகளால் மறைக்கப்பட்டேயிருக்கின்றது… வெறித்தனமான எண்ண அலைகள் வெளிக்கிளம்பியவுடனேயே வெப்பக்குகை திறக்கப்படுகின்றது…. …

Read More

தலைப்பிலி கவிதை

-சௌமியா-(மட்டக்களப்பு, இலங்கை) சுற்றித் திரியும் வண்ணப் பறவையாய் சுதந்திரக் காற்றில் மிதந்தோம் பட்டென்று குண்டு பாயவே உடைந்தன சிறகுகள் சில்லென்ற காற்று சீறியது புயலாய் நீலக் கடலின் நிறமெங்கு போனதோ கிணற்று நீரும் சிவப்பாய் மாற கூவும் குயில்கள் ரத்தம் பருகும் …

Read More