தலைப்பிலி கவிதை

-சௌமியா-(மட்டக்களப்பு, இலங்கை)

சுற்றித் திரியும் வண்ணப் பறவையாய்
சுதந்திரக் காற்றில் மிதந்தோம்
பட்டென்று குண்டு பாயவே உடைந்தன
சிறகுகள்
சில்லென்ற காற்று
சீறியது புயலாய்
நீலக் கடலின் நிறமெங்கு போனதோ
கிணற்று நீரும் சிவப்பாய் மாற
கூவும் குயில்கள்
ரத்தம் பருகும் வெளவாலாய்; …..
மண்ணிலே புதைகின்றோம்
நினைவுகளின் சாரல்களாய்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *