கவிதை வி.யாழினி யோகேஸ்வரன்

எங்கள் காலங்கள்

வலி நிறைந்தவை

புதையுண்டோரை தினம் தினம் கணக்கெடுத்தபடியே

படுக்கைக்கு போகிறோம்

நீளும் இரவினை கடக்கவியலா – மா பாவிகள் ஆனோம்

கனவுகள் வருவதேயில்லை – எனின்

தூங்கவே முடிவதில்லை

தயைகூர்ந்து கேட்கிறேன்

புதைகுழியில் கிடப்போரை

கீறலேதும் இல்லாமல்

பவுத்திரமாய் மேலெடுங்கள்

இப் பாதகத் தீவினை – பார்த்தொருமுறை

காறி உமிழட்டும் – தூ…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *